புதன், 22 ஏப்ரல், 2020

கொரோனா தொற்றும்.. மீனவர்கள் பட்ட துயரமும்.

கடல் உணவு மனிதனின் முக்கிய உணவுகளில் ஒன்று ..!
"மீன் சாப்பிடுங்கள்" என்று சொல்லாத மருத்துவர்களே கிடையாது,
மீன் சாப்பிடாத மருத்துவர்களும் கூட... தங்கள் நோயாளிகளுக்கு மீன் சாப்பிடுங்கள் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
அதுவும் முக்கியமாக கொலஸ்டரோல், அதீதஎடை , இருதயநோய் உள்ளவர்களை மீன் சாப்பிட வேண்டும் என்று என்று பரிந்துரைக்கிறார்..
மனிதர்களின் புத்திக்கூர்மை, உடல்திடம், என மனிதனை ஆரோக்கிய வட்டத்துக்குள் வைத்திருப்பதில் மீனின் பங்கு மிக முக்கியமானது,
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடைய உணவு மீன் உணவாகும்..
காரணம் மீன் உணவில் அதிக அளவில் புரோட்டீன் ஒமேகா-3 போன்ற சத்துக்களும் நிறைந்திருப்பதால் வாரத்தில் இரண்டு முறையாவது மீன், நண்டு, இறால்,உள்ளிட்ட கடல் உணவை எடுத்துக்கொள்வது தான் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மனிதனுக்கு நிறைவாக இருக்கும்,
கொரோனோ போன்ற தொற்றுநோய்கள் உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போது நம்மை நாமே தற்காத்துக் கொள்ள கடல் உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகிறது,
 உலக நாடுகள் முழுவதும் அந்தந்த நாட்டில் உள்ள மக்களுக்கான புரதச் சத்து மிகுந்த உணவுகளை உத்தரவாதம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது,
பக்கத்து நாடான இலங்கையில் கூட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித தடையும் கிடையாது, பிடிக்கின்ற மீன்களை கடல் சாராத மாவட்டங்களின் சந்தைக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைப்பதில் அரசே முன்னின்று பங்காற்றுகிறது....
ஆனால் தமிழகத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது

தமிழக மீன் துறையை பொறுத்த வரையிலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது... மறுபுறத்தில் மீன் விற்பதற்கு தடை கிடையாது மீன் சந்தைகளுக்கு தடை கிடையாது என்ற அறிவிப்பும் உள்ளது,
இது மீனவர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது காரணம்,
கடலுக்கு சென்று மீன் பிடிக்காமல் எப்படி? மீன் விற்பனை செய்ய முடியும்" என்கிற கேள்விதான். மீன்பிடித் தொழிலும் விவசாயத்தை போன்றதே மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசியமான உணவு பொருள் என்பதால் இதில் தெளிவான விளக்கத்தை தமிழக மீன்துறை தெளிவுபடுத்த வேண்டும்,
மீன்பிடித்தொழிலுக்கு செல்லலாம் என்றால் மீனவமக்களுக்கான
வழிகாட்டுதல்கள்,
கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிக்க வேண்டும்.
மீன் வியாபாரத்திற்கு செல்லும் சில்லறை விற்பனையாளர் மற்றும் மீனவ மகளீர்களுக்கான வழிகாட்டுதல்கள் ,
அவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்,
அறிவித்து சம்மந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து,தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றால் மீனவமக்களின் வாழ்வதாரத்திற்கான
ஏற்பாடுகளை அரசு உறுதியாக செய்ய வேண்டும்.
காரணம் ஊரடங்கு உத்தரவையொட்டி மீனவர்களுக்கு ஏற்பட்ட தொழில் இழப்பு என்பது சாதாரண இழப்பீடாக எடுத்துக்கொள்ளக்கூடாது ,
இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படை தாக்குதல்...
மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம், பிடித்த மீனுக்கு கட்டுப்படியான விலை இல்லாமை, இன்னும் ஏராளமான காரணங்களால் வருடத்தில் 100 நாட்கள் அல்லது 150 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க செல்லுகிற நிலையில், தற்போது ஒரு மாதமாக மீன்பிடித் தொழில் இழப்பு என்பது மீனவர்களுக்கு பெரும் இழப்பாகும்,

தமிழகத்தில் உள்ள 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் விசைப்படகுகள் 75,000 நாட்டுப்பாடகுகள், இவைகளில் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கூடிய 15 லட்சம் மீனவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகவும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர்
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு தமிழ் நாட்டில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது,
நாகை மாவட்டத்தில்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை அக்கரைபேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஏப்ரல்,14 வரை கடலுக்கு செல்லாமல் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடுவையாற்று கரையில் நிறுத்திவைத்துள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகம், மீன் ஏலக்கூடங்கள், மீன் மார்க்கெட்டுக்கள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஐஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆட்கள் இன்றி நாகை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது.
 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், 50 ஆயிரம் மீன்பிடி தொழில் சேர்ந்தவர்களும் வேலையிழந்துள்ளனர். நாளொன்றுக்கு 50 கோடி அளவிலான மின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது நாகை மாவட்டத்தில்

குமரி மாவட்ட மீனவர்களை பொருத்தவரை வாரக்கணக்கில்... மாதக்கணக்கில்... கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் வழக்கம் உடையவர்கள்,
அரசின் ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்கு சென்று விட்டன அவைகள் தற்போது கரைக்கு திரும்ப வந்து கொண்டிருக்கிறது,
தேங்காய் பட்டினம், குளச்சல் உட்பட பல இடங்களில் 1000 த்திற்கு மேற்பட்ட விசை படகுகள் நிறுத்த பட்டுள்ளன. ஒவ்வெரு படகிலும் பல லட்சம் மதிப்பிலான ஏற்றுமதி மீன்கள் தேக்கம் அடைந்துள்ளது. மாதக்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் மீன்பிடித்து வந்துள்ளனர்.
 அவர்கள் பிடித்து வந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிறுவனங்கள் அதன் வாகனங்கள் வராமல் இருப்பதால் தற்போது மீன்கள் படகிலேயே தேங்கிக் கிடக்கின்றன ,
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பெருமளவு மீனவர்கள் கூட்டம் கூடாமல் ஏலம் நடத்தி சில்லறை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மீன்களை வழங்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமென குமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இம் மாவட்டத்தின் பிரதான தொழில் மீன்பிடிதான், மூன்றாயிரம் விசைப்படகுகளும் 15,000 நாட்டுப் படகுகளும் தற்போது வேலை இழந்து காணப்படுகிறது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள், பெரிய விசைப்படகுகள் மட்டுமன்றி சாதாரண கைவலை,கரைவலை, எந்திரம் பொருத்தப்படாத கட்டுமரங்கள், போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது, கடலுக்குள் மீனவர்கள் இறங்கினாலே கடற்படை கடலோர காவல்படையினர், விரட்டியடிக்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவிற்கு முன்னால் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்குள் விரித்து வைத்திருந்த நண்டு வலைகளை திரும்பச் சென்று சென்று எடுப்பதற்கு கூட கடற்படையினர் அனுமதி அளிக்காமல் உள்ளனர், இதனால் கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்து மீனவர்களின் உடமையாக இருக்கக்கூடிய வலைகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பல மீனவர்கள் உள்ளனர், கரைவலை வைத்து பிடிக்கின்ற மீனை மீனவப் பெண்கள் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.
மேலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை உள்ளது ,
ஏப்ரல் 15ம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை வரை தேதி வரை வரை மீன்பிடி தடை காலம் துவங்கி விடும் ஆகமொத்தம் மீன்பிடித்தொழில் கால் ஆண்டுகளுக்கு மேலாக தொடர் இழப்பை சந்திக்க உள்ளது.
இவ்வளவு இழப்புகளையும் தாங்கிக்கொண்டு இருக்கக்கூடிய மீனவ மீனவ இருக்கக்கூடிய மீனவ மீனவ சமூகத்திற்கு அரசின் நிவாரணம் என்பது பூஜ்ஜியம் ஆகவே உள்ளது.

ஊரடங்குச் சட்டத்தால் இயல்பு நிலையை இழந்த நாட்டு மக்களுக்கு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். அதில் விவசாயிகள், விவசாயக் கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், முறை சார்ந்த தொழிலாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என பட்டியல் நீள்கிறது,
மாநில அரசும் அதன் பங்கிற்கு ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை அறிவித்து
தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பாதிக்கபட்ட மக்கள் பிரிவினருக்கு நிவாரணங்கள் அறிவிக்கின்ற போது...!
மத்திய அரசும்' மாநில அரசும் ' எந்த இடத்திலும் பெயருக்கு கூட மீனவர்கள் என்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை என்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
எனவே மத்திய மாநில அரசுகள் நாட்டுமக்களுக்கு புரதச்சத்து மிகுந்த உணவான கடல் உணவுகள் கிடைப்பதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும்... ஊரடங்கு சட்டத்தால் இயல்பு நிலையை இழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாக
ஈரான் போன்ற வெளிநாடுகளுக்கும், கேரளா கர்நாடகா.. போன்ற வெளி மாநிலங்களுக்கும் பிழைப்புக்காக செல்கிற மீன்பிடிக் கூலிகள் தங்கள் வீடுகளுக்கு வந்து சேர முடியாமல் தவிக்கின்ற கொடுமை ஒருபுறம்.. மறுபுறம் அந்த குடும்பங்கள் வறுமையில் வாடுகிற அவலநிலை, இவைகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை...!
 இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் நமது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் அவல நிலையை போக்க வேண்டும்
தமிழகத்தில் மீன்பிடித் தொழில் செய்வதற்கு தேவையான எரிபொருட்களை மானிய விலையில் வழங்குவதல், சர்வதேச கடற்பகுதியில் வேற்று நாட்டினர் மிகப் பெரிய படகுகளில் மீன்களை அள்ளிச் செல்வதை தடுத்தல், மீனவர்கள் நிலையான வருமானத்தை உறுதிசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்று தமிழக மீனவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று சிரமப்படுவதை விடுத்து உள்ளூரிலேயே தொழில் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்


தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்

உலக புத்தக தினம்

ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.

புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறது.
புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு யுனோஸ்கோ அமைப்பு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2019, ம் ஆண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது, இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டு புத்தக மாநாடு கொண்டாடப்பட உள்ளது.

எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குவை சுவர்களிலும் இஷாங்கோ (Ishango) எலும்புகளிலிருந்து தான் இவை சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன இதன் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக களிமண் கலவைகளாலும், மரப்பட்டைகளிலும், விலங்குகளின் தோளிலும் ஓலைச்சுவடிகளில்,காகிதத்ங்களில், எழுதப்பட்டது... இவை அனைத்துமே புத்தகங்கள்தான், வரலாற்று பதிவுகள்தான்.
அறிஞர்கள் கூறுவது ஒன்றே! அது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. இவர்களின் தத்துவங்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தத்துவங்களை நாம் தெரிந்துகொள்ள இவர்களை வாசிக்கவேண்டும். காலையில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்று நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன்னுடைய வாசிப்பில் மெய்மரந்த அம்பேத்கரால் தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது. நமது நாட்டை ஆட்சி செய்த பல அரசியல் தலைவர்களும் இலக்கிய ஞானம் பெற்றவர்களே. காரணம் அவர்களிடம் இருந்த வாசிப்பு பழக்கமே. இந்த சமூகத்தில் நமக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உருவாக்கிக்கொள்ள வாசிப்புதான் உதவும்.
அண்ணாதுரை
புத்தகம் படித்து முடித்தபிறகு தான் இருதய அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.
நேரு
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்'
                                                 பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்:
'என் கல்லறையில் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது'
                                                         ---
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது ?                                             
'புத்தகம்'

உலகம் முழுவதும்
விஞ்ஞான வளர்ச்சி, மீடியாக்களின் தாக்கம் என்று பல்வேறு காரணங்களால் இன்று புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மாணவர்களும், இளைஞர்களும், முதியவர்களும் கூட தங்களது பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனுடன் செலவிடுகின்றனர். சமுக ஊடகங்கள் மூலம் உலகில் நடக்கும் நிகழ்வுகள் ஓரிரு நிமிடங்களில் தங்களது விரல் நுனிகளில் கிடைத்து விடுகிறது என்பது உண்மை. எனினும், புத்தகங்களை வாசிப்பதற்கும் சமூக ஊடகங்கள் மூலம் வாசிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வது மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும் இதை ஊக்கப்படுத்த முழு அக்கறை காட்டவில்லை எனவும், பாடங்களை படிக்க மட்டுமே அதிக கவனம் செலுத்துவதும் இதற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. படைப்பாளிகளும் தங்களது படைப்புகளை வெளியிட பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால், புத்தகங்களை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு செல்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தமிழகத்தில் புத்தக வாசிப்புக்கான நம்பிக்கையூட்டும் வகையில்.. எப்படி தொன்னுறுகளில் அறிவொளி இயக்கம் வாசிப்பின் மகத்துவத்தை கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சென்றதோ ....

அதேபோல்
கடந்த 10 ஆண்டுகளில்
 பெரும்பாலன நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் வருடம் தோரும் நடைபெருகின்றன. அங்கே குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாங்கிச் செல்கின்றனர். அங்கே குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், என அனைவருக்கும் ஏற்றபுத்தகங்கள் அனைத்துத் தலைப்புகளிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன. காரணம் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைவரும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே. என்னதான் டிஜிட்டல் வேர்ல்டு என்று சொன்னாலும் புத்தகத்தின் இடத்தை எவையும் பதிலீடு செய்ய இயலாது. எனவே வாசிப்பின் வரப்பிரசாதமாக இன்று புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன.

உங்களை புரட்டிப் போட்டு விடும் புத்தகம் ஒருநாள் கிடைக்கும். அந்தநேரம் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும்.
 "அதற்கொரு நிபந்தனை". அதை தேட வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தபுத்தகத்தில் எந்த பேருண்மை வந்து உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுமோ … யாராலும் சொல்ல முடியாது. தினமும் பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்போம்.


தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்