புதன், 4 மார்ச், 2020

வறண்டு போகும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்க்கை

வறண்டு போகும் உள்நாட்டு
 மீனவர்கள் வாழ்க்கை
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக கடல் மீன்பிடிப்பை விட, உள்நாட்டு மீன்பிடிப்பு அதிகரித்து வருகிறது,

விவசாயத்தில் மரபியல் மாற்றம் செய்த பயிர்கள் மூலம் எப்படி சாகுபடியை உயர்த்த முயற்சி செய்தார்களோ' அதே போல் உள்நாட்டு மீன் உற்பத்தியிலும் மரபியல் மாற்றம் செய்யபட்ட மீன் இனங்களை அறிமுகம் செய்ததன் விளைவாக உள்நாட்டு மீன் உற்பத்தி உயர்ந்துள்ளது,
குறிப்பாக பிற மாநிலங்களை போல் நமது மாநிலத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை, நமது மாநிலத்தின் நீர் நிலைகள் பருவ மழையை நம்பியே உள்ளது,
 நமது நீர் நிலைகள் குறுகிய காலத்திலேயே வற்றி விடும் தன்மை உடையது என்பதால் அதற்கு ஏற்றார் போல் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய, அமூர்கெண்டை (Amur carp) மரபுவழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேபியா (Generically improved formed tilapia) ஜெயந்திரோகு, கெளுத்தி வகையை சேர்ந்த பங்கேசியஸ், போன்ற மீன் இனங்கள் பெரும்பாலும் வளர்க்கபடுகிறது.
தமிழகத்தில் உள்நாட்டு மீனவர்கள் இருவகையில் உள்ளனர், முதல் வகையினர் அரசின் கட்டுபாட்டில் உள்ள நீர் நிலைகளில் குத்தகை மற்றும் கூலி அடிப்படையில் மீன் பிடிப்பவர்கள், இரண்டாவது வகை சொந்தமாக
குளம் ,குட்டை வைத்து மீன்வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருபவர்கள்.
மொத்தத்தில் உள்நாட்டு மீனவர்கள் தமிழகத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர் மொத்த உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் 314 உள்ளது , இதில் 303 ஆண்கள் கூ‌ட்டுறவு சங்கத்தில் 87399 பேர் உறுப்பினராகவும்,
11 பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் 8009 பேர் உறுப்பினராகவும், மொத்தத்தில் 95408 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

உள்நாட்டு நீர்வளம்
""""""""""""""""""""""""""""""""
தமிழ் நாட்டில் மீன் வளர்ப்பிற்கு உகந்த நீர் தேக்கங்கள், பெரிய மற்றும் சிறிய பாசன குளங்கள் மற்றும் குட்டைகள்,
ஆறுகள், கழிமுகங்கள் மற்றும் இதர நீர் நிலைகளை உள்ளடக்கிய பல்வேறு உள்நாட்டு நீர் ஆதாரங்கள் 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உள்ளது.
இதில் பொதுபணிதுறையின் கீழ் 78 நீர் தேக்கங்கள் உள்ளன, இதில் மீன் உற்பத்திக்காக 61 நீர்நிலைகளை தமிழ் நாடு மீன்வளத்துறை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது மேலும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுபாட்டிலும் நீர் நிலைகள் உள்ளன ,

இவற்றில் லட்சக்கணக்கான ஏழை எளிய மீனவர்கள் நேரடியாகவும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலமாகவும் குத்தகைக்கு எடுத்து மீன்பிடி மற்றும் மீன்பாசி எடுத்து வருகின்றனர்,
இச்சூழலில் தமிழக அரசு 2011 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் அரசின் நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் உரிமையை பொது ஏல முறைக்கு கொண்டு வந்துது , இதன் விளைவாக உள்ளூர் அரசியல் ஆதிக்க சக்திகள், பண முதலைகள் கைவசம் அரசின் நீர் நிலைகள் சென்றது, பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த மீனவர்கள் புதிய குத்தகைதார்களின் கட்டுபாட்டுக்குள் சென்று ஒட்ட சுரண்டபட்டனர், பல்வேறு இடங்களில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கபட்டனர்.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் குரல் கொடுத்து,
 கடந்த 2014 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர்
கே.பாலகிருஷ்ணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதில் கூறிய அன்றைய மீன்துறை அமைச்சர்
 திரு ஜெயபால் அவர்கள் தனியாரின் வசம் குத்தகைக்கு நீர் நிலைகளை கொடுத்தாலும் அதில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்பட்ட மாட்டார்கள் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என உறுதியளித்தார், ஆனால் இன்று வரை அது கடைபிடிக்கவில்லை, தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை,
லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தனியாருக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் பெரிய வருவாய் அரசுக்கு வரவில்லை, இதுவரை அரசின் நீர் நிலைகள் ஐந்து வருட காலம்
குத்தகை மூலம் 35 நீர் நிலைகள் ஏலம் விடபட்டு வெறும் 30.75 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது

அரசின் மெத்தனம்
"""""""""""""""""""""""""""""""
நீலபுரட்சி, தேசிய மீன்வள கொள்கை, என அரசு பல்வேறு பெயர்களில் திட்டம் வகுப்பதாக கூறினாலும்,
இத் திட்டங்கள் யாவும் உள்நாட்டு மீனவர்களுக்கு பலண் அளிக்கவில்லை, குறிப்பாக உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க மீன் குஞ்சுகள் உற்பத்தி போதுமானது அல்ல, பருவமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு இருக்கும் உரிய காலத்தின்
போது மீன் குஞ்சுகள் கிடைப்பது இல்லை ,

மீன் குஞ்சுகள் தயாராக இருக்கும் போது நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டு போகிறது. மேலும்
மீன்களுக்கனா இரை தட்டுப்பாடு, மீன்களுக்கான இரை விலையேற்றம், மீன்களை தாக்கும் நோய் காரணிகள், ஆகியவற்றால் உள்நாட்டு மீன் உற்பத்தி கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
தமிழக நீர் நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் உள்நாட்டு மீன் 4 50 லட்சம் டன் உற்பத்தி செய்ய முடியும், இது தமிழ் நாட்டின் கடல் மீன் உற்பத்திக்கு இனையானது ஆகு‌ம்,
மேற்கண்ட
இலக்கை எட்ட 70 கோடி மீன் குஞ்சுகள் தேவை, மீன்துறைக்கு ஒதுக்கபட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை பயன்படுத்தி
  2016-17 ம் ஆண்டு 64 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யபட்டது, 6 கோடி மீன் குஞ்சுகள்தான் ஒட்டு மொத்த தேவைக்கு குறைவாக உள்ளது, கடந்த காலங்கங்களை விட மீன் குஞ்சுகள் உற்பத்திகாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தேவையை பூர்த்தி செய்ததாக, மீன்துறை நிர்வாகம் கூறினாலும், இந்த ஆண்டு மீன் உற்பத்தி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது,
கடந்த 2015-16 ம் ஆண்டு தமிழக உள்நாட்டு மீன் உற்பத்தி 2.42 லட்சம் டன், இந்த ஆண்டு 2016-17 ல் 1.97 லட்சம் டன் உற்பத்தி ஆகி உள்ளது, இது கடந்த ஆண்டைவிட 0.45 லட்சம் டன் குறைவான உற்பத்தி ஆகும்.
இதன் காரணமாக தமிழ் நாட்டு மக்களுக்கான மீன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டவதுடன் , உள்நாட்டு மீனவர்கள் தங்கள் வாழ்நிலையில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

சமூக நல திட்டங்கள் புறக்கணிப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மீன்துறை வளர்ச்சிக்கென மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட திட்டங்களை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் உள்நாட்டு மீனவர்களையும் இனைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது தமிழகத்தில்தான் உள்நாட்டு மீனவர்களை எவ்விதமான சமூகநல திட்டங்களிலும் சேர்க்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக கடல்சார் மீனவர்கள் நடத்திய தொடர் போராட்ட நடவடிக்கையின் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது, இத்திட்டங்கள் அனைத்திலும் உள்நாட்டு மீனவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதே நியாயம்,
குறிப்பாக ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கபட்டு 61 நாட்கள் வேலையின்றி இருக்கும் மீனவர்களின் குடும்பம் ஒன்றுக்கு தமிழக அரசு தலா ரூ 5000 ம் வழங்குகிறது.
அதுபோல் இரண்டாவது திட்டமாக மீன்பிடி குறைவு கால நிவாரணம் கடல் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ 5000 வீதம் வழங்குகிறது, மேற்கண்ட இரண்டு நிவாரண திட்டங்களும் கடல் மீனவர்களுக்கு போதுமானது இல்லை.
ஆயினும் அத்திட்டம் உள்நாட்டு மீனவகளுக்கு வழங்குவது இல்லை,
அதற்கு அரசு கூறும் காரணம் உள்நாட்டு மீனவர்களுக்கு கடல் மீனவர்களை போல் மீன்பிடி தடைகாலம் இல்லை என்பதே, ஆனால் உன்மை நிலவரம் என்னவென்றால் வருடத்தில் ஆறுமாதங்கள் மட்டுமே நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும், கோடை காலங்களில் "அறிவிக்கபடாத மீன்பிடி தடைகாலத்தை" வறட்சி உருவாக்கிவிடுகிறது எனவே உள்நாட்டு மீனவர்களையும் மேற்கண்ட நிவாரண திட்டங்களில் இனைக்கபடுவதே நியாயம்.

தேசிய மீனவர் சேமிப்பு நிதி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஏற்கனவே கூறிய இரண்டு திட்டங்களும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது, மூன்றாவதாக உள்ள தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம் என்கிற
இத்திட்டமானது மத்திய மாநில அரசுகள் கூட்டாக சமவிகித பங்களிப்போடு அமுல்படுத்தி வரும் திட்டமாகும்,
இதன்படி ஒவ்வொரு மீனவர்களும் மாதம் ஒன்றிற்கு ரூ 175/ வீதம் 8 மாதங்களும், 9 வது மாதம் ரூ 100 / ம் ஆகமொத்தம் ரூ 1500 செலுத்த வேண்டும், இத்தொகையுடன் மத்திய அரசு ரூ 1500/ ம், மாநில அரசு ரூ 1500/ ம் சேர்த்து ரூ 4500 /, யை மீனவர்களுக்கு பட்டுவாடா செய்வார்கள்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பருவ காலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ,ஆகிய மூன்று மாதங்களிலும் இதர பல மாநிலங்களில் வேறு பல மாதங்களிலும் , கடல் சீற்றத்துடன் காணப்படும் அத்துடன் மழை புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழும், இக்காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது, இதுபோன்ற காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதுதான் தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம்,
இந்த திட்டத்திலும் உள்நாட்டு மீனவர்கள் முற்றிலும் புறக்கணிக்க பட்டுள்ளனர். கடல் மீனவர்கள் படும் துன்பதுயரம் அனைத்தும் உள்நாட்டு மீனவர்களுக்கும் பொருந்தும் என்பதால்தான், பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பு வெளியிட்டுள்ள
நீல புரட்சிகான மத்திய அரசின் வழிகாட்டும் திட்ட ஆவணத்தில், தேசிய மீனவர் மறுவாழ்வு திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் 22 ம் பக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது Saving cum Relief (for both inland and marine fishres ) மத்திய அரசின் இத்திட்டம் உள்நாட்டு மீனவர்களுக்கு சேர்த்தே' உருவாக்கப்பட்டது என்பதுதான் இதன் அர்த்தம் ஆனால் நமது தமிழக அரசு நமது உள்நாட்டு மீனவர்களை இத்திட்டத்தில் சேர்க்க மறுத்து வருகிறது.
மத்திய அரசு கூறியுள்ள அடிப்படையில்
இத் திட்டத்தை அமல்படுத்தி வரும் அண்டை மாநிலமான கேரள மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மாநிலங்களில் கடல்சார் மீனவர்களுடன் உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த விதமான சமுக திட்டங்களும் உள்நாட்டு மீனவர்களுக்கு செயல்படுத்தததால் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் பயனற்று கிடக்கிறது , நாட்டிற்கு புரதசத்து மிகுந்த உணவை உற்பத்தி செய்து தரும் உள்நாட்டு மீனவர்கள் சோர்வுற்று அவர்கள் வாழ்கை எப்போதுமே வறண்டு கிடப்பது நியாயம் இல்லை.

எனவே கடல் மீனவர்களுக்கு வழங்கபடும் சமுக நல திட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.



கட்டுரையாளர்

சி.ஆர்.செந்தில்வேல்

மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்.
இராமேஸ்வரம்
தொடர்புக்கு : 9940817745





சாகர்மாலா , நெய்தல் குடிகளின் பேரழிவு திட்டம்

சாகர்மாலா , நெய்தல் குடிகளின் பேரழிவு திட்டம்
"""""""""""""""""""""""""""""""""""""""""

வறுமையில்
வாடும் 30 கோடி இந்திய மக்களின் முன்னேற்றம் குறித்து பேசாத மோடி, அன்னிய மற்றும் இந்திய கார்பரேட்களின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும் நோக்குடன், மேக் இன் இந்தியா, ஸ்டார் ஆப் இன்டியா, தூய்மை இந்திய, ஸ்கில் இன்டியா, இதன் வரிசையில் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டுவரபட உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் திட்டம்தான் சாகர்மாலா ( கடல் மாலை ) திட்டம். சீனாவின் முத்துமாலை திட்டத்தை காப்பியடித்து செய்யபடுகிறது.
இத்திட்டம் 2003 ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் முன்மொழியபட்டு கிடப்பில் போடப்பட்டது, தற்போது 2015 மார்ச் 25 ல் மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, இதனை அமுல்படுத்தும் போது வரும் எதிர்ப்பை சமாளிக்க ஓர் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை என்ற முறையில், சாகர்மாலா உச்சநிலை கமிட்டி (SAGAR MALA APEX COMMITTEE )அதன் கீழ் சாகர்மாலா டெவலப்மென்ட் கம்பெனி என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதை இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதியபட்டது, இந்த அமைப்புக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார்,

அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது பாதிக்கப்படும் மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க வலிமை மிக்க அமைப்பாக சாகர்மாலா கம்பெனி அமையும், இதில் மத்திய
மாநில அரசுகளோ கீழ்மட்ட அரசின் நிர்வாகங்களோ தலையிட முடியாத
வகையில், கம்பெனிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இக் கம்பெனியை அமைத்தது மத்திய அரசாக இருந்தாலும், இந்த கம்பெனியை இனிமேல் நிர்வகிக்க போவது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான், அரசு
ஒரு குறைந்த அளவு முதலீடு
செய்து விட்டு அதில் கிடைக்கும் லாபத்தில் முதலீட்டுகான பங்கைப் ஒரு பங்குதாரர் என்ற முறையில் அரசு பெற்று கொண்டு ஒதுக்கி விடும் முழுக்க முழுக்க அன்னிய இந்திய மூலதனத்தில்தான் இக்கம்பெனி செயல்படும், இதில் கிடைக்கும் லாபத்தையும் துறைமுக சேவைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் கம்பெனி சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, பெயரளவில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார் ஆனால் பெரு முதலீடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குனர்களே கம்பெனியை வழிநடத்துவார்கள், கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியை எப்படி வடிவமைத்து அதிகாரம் வழங்கியதோ, அதே முறையை பின்பற்றி சாகர்மாலா கம்பெனிக்கும் இந்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திம் நான்கு அம்சங்களை கொண்டது, ஒன்று பழைய துறைமுகங்களை நவீனமாக்குவது , புதிய துறைமுகங்களை உருவாக்குவது ,
இரண்டு வான்வழி, தரைவழி. நதிவழி, ரயில்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது ,
மூன்று துறைமுகம் சார்ந்த ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார மண்டலம் அமைப்பது.
நான்கு கடல்சார் சமூகங்களின் மாற்று வாழ்வாதார திட்டம் குறித்து.

இத்திட்டத்தை நிறைவேற்ற மொத்தத்தில் எட்டு லட்சம் கோடி தேவை எனவும், இத்திட்டம் நிறைவேற்றினால் 2020 க்குள் ரூ 110 பில்லியன் அளவுக்கு சரக்கு ஏற்றுமதியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் 400 மேற்பட்ட திட்டங்கள் உள்ளது, நாற்பது லட்சம் பேருக்கு நேரடியாகவும் அறுபது லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்குமென ஆசை வார்த்தை கூறபடுகிறது,

துறைமுக கட்டமைப்பை மேம்படுத்துவது
""""""""""""""""""""""""""""""""""""""""""
துறைமுகங்களை மேம்படுத்துவதே
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அறிக்கை கூறுகிறது ,
அதனடிப்படையில் ரூபாய் 91434 கோடி முதலீட்டில், 12 பெரிய துறைமுகங்களையும் , 142 சிறிய துறைமுகங்களையும் , நவீனபடுத்தி சர்வதேச தரத்திற்கு சரக்கு பெட்டகங்களை கையாள்வது, இதன் தொடர்ச்சியாக
மராட்டிய மாநிலத்தில் வதவன், கர்நாடக மாநிலத்தில் பெலிகிரி, தமிழகத்தில் இணையம் தற்போது குளச்சல் கோவலம், மற்றும் சீர்காழி, ஒரிசாவில் பாரதீப் வெளி துறைமுகம், மேற்கு வங்கத்தில் சாகர் தீவு, உள்ளிட்ட
ஆறு புதிய துறைமுகங்கள் அமைப்பது இதற்கான ஒப்புதலை 5-7-2016 ல் மத்திய அரசு வழங்கியது.
புதிய துறைமுகங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்பது உன்மையே, ஆனால் அவற்றை அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் செய்யும் போது தான் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுபாட்டில் துறைமுகங்கள் செல்லும் என்றால், நாட்டில் உள்ள சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் மண்டியிட்டு கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு வழிகோலாது.


மேலும் இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும், இந்திய துறைமுகங்களை நேரடியாக தனியாரிடம் தாரைவார்க்காமல், கொல்லைபுறம் வழியாக தனியார் வசம் கொடுப்பதே சாகர்மாலா திட்டம் என்கிற சாகசம், சாகர்மாலா கம்பெனிக்கு பின்னால் ஒழிந்திருக்கும் கார்ப்ரேட்டுகள் புதிய துறைமுகங்களை அமைக்கவும், பழைய துறைமுகங்களை நவீனமாக்கும் நடவடிக்கை என்கிற பெயரில் முதலீடு செய்து நாட்டில் உள்ள அனைத்து துறைமுக கட்டமைப்பை தங்கள் வசம் கொண்டு செல்ல எடுக்கப்படும் நவீன உத்தியே சாகர்மாலா திட்டம்.

துறைமுகங்கள் இணைப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""
  இருப்புபாதை , தரைவழி, வான்வழி, உள்நாட்டு நீர்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது
இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய நோக்கம் என்கிறது திட்ட அறிக்கை, இதில் இந்திய ரயில்வே துறை நிர்வாகம் சாராமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில், இந்திய துறைமுக ரயில்வே கம்பெனி என்ற நிறுவனத்தை 10 -7-2016 அன்று துவங்கி,
அதை இந்திய கம்பெனி சட்டம் 2013 கீழ் பதிவு செய்து தற்போது 9 துறைமுகங்களை இணைக்கும் வகையில் 3300 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்புபாதை அமைக்க 25 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது,
இவற்றை நிறைவேற்ற தேவையான ரூ 28000 கோடி முதலீடை அன்னிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் திரட்ட போவதாக திட்ட அறிக்கை கூறுகின்றது .
சாலைகளை புதிதாக அமைத்தல், விரிவுபடுத்துதல் என்ற வகையில் 79 சாலைகள் சாகர்மாலா திட்டத்தின் கீழும், 45 திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலை துறை கொண்டு வந்துள்ள பாரத்மாலா திட்டத்தின் மூலமாக செய்யபடும் என அறிக்கை கூறுகின்றது.
இத்துடன் எ‌ரிவாயு மற்றும் எாிபொருள் போன்ற திரவ பொருட்களை நாடு முழுக்க கொண்டு செல்ல குழாய் அமைப்பது.
குறிப்பாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்கு பெட்டகங்களை கையாள்வது, காரணம் தரைவழியை விட நீர்வழி போக்குவரத்து, பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால், மத்திய மோடி அரசு கடந்த 10-3-2016 அன்று உள்நாட்டு நீர்வழி மசோதா 1982 யை திருத்தம் செய்து, தேசிய நீர்வழி மசோதா 2016, என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது,
ஏற்கனவே இந்தியாவில் கங்கை, பாகிரதி, ஹீக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ண -கோதாவரி, நதிகள் கேரளத்தில் உள்ள சம்பகார மற்றும் உத்யோக் மண்டல கால்வாய் உள்ளிட்ட ஐந்து வழி தடங்களில் உள்நாட்டு போக்குவரத்து உள்ளது .
இந்த ஐந்து வழி தடங்களை மேம்படுத்துவது, அத்துடன் புதிதாக 106 நதிகளையும் உள்ளடக்கி, 111 நதிகளில்
  உள்நாட்டு போக்குவரத்தை துவங்குவது என மசோதா கூறுகிறது, இதனடிப்படையில், தமிழகத்திலுள்ள கீழ்கண்ட ஏழு நதிகளில் உள்நாட்டு நீர்வழி தடம் அறிவிக்கப்பட்டுள்ளது,
1, காவிரி-கொல்லிட நதிகளில் , ஈரோடு மாவட்டம் உரச்சிகோட்டை துவங்கி, நாகை மாவட்டம் பழையாறு கடற்கரை வரையிலும்,
2, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை துவங்கி அம்பாசமுத்திரம் அலயூர் வரையும்,
3, பாலாற்றில் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ரயில்பாலம் துவங்கி , காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்க பட்டிணம் கடற்கரை வரை.
4,பழையாற்றில் குமரி மாவட்டம் வீரநாராயணமங்களம் துவங்கி மணக்குடி கடற்கரை வரை.
5, பொன்னி ஆற்றில் சாத்தனூர் அணை முதல் கடலூர் துறைமுகம் வரை,
6, தாமிரபரணி ஆற்றில் நெல்லை நகரில் துவங்கி , தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கடற்கரை வரை,
7, வைகை நதியில் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி முதல் மதுரை மாவட்டம் விரகனூர் வரை.
மேற்கண்ட நீர்வழி பாதைகள் சாதாரண மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டமில்லை, முழுக்க முழுக்க இந்திய மற்றும் பன்னாடு நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது,
இதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யவில்லை, விவசாயிகள் பாசனங்களுக்கு நீரை பயன்படுத்துவதில், உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பு செய்வதிலும் ஏற்படும் சிரமங்களை பற்றி அறிக்கையில் எதுவும் கூறவில்லை,
இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் மாட்டார்கள்

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்தார் , இதன் உள்ளடக்கமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை மற்றும் நதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியே ,


நாட்டில் உள்ள நதிகளின் மீதான மாநில அரசுகளுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமைகளையும், மோடி அரசு ஒரே ஒரு மசோதாவான உள் நாட்டு நீர்வழி மசோதா மூலம் பறித்துக் கொண்டது,

கடற்கரைசார் தொழில் மண்டலம்
"""""""""""""
தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்,
சாகர்மாலா திட்டத்தின் 
தொடர்ச்சியாக மிக முக்கியமான ஒன்றாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கடற்கரையோர சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,
இந்தியாவில் 14 மண்டலங்கள் அமைக்கபடவுள்ளது , அதில் மூன்று மண்டலம் தமிழகத்தில் அமையவுள்ளது.
1,மன்னார் வளைகுடா மண்டலம், தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கியது.
2, பூம்புகார் மண்டலம், கடலூர் துறைமுகத்துடன் இணைக்கும் வகையில், கடலூர், பெரம்பலூர், அரியலூர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஐ உள்ளடக்கியது,
3, VCIC தென் மண்டலம், ( VENTURE CAPITAL INVESTMENT COMPETITION )
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர் , காஞ்சீபுரம் மாவட்டங்களைச் உள்ளடக்கியது,
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை தவிர தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை இதில் விடுவிக்க காரணம் இப்பகுதியில் ஆதம் பாலம் உள்ளது, மணல்மேடுகள் கடலில் அதிக அளவில் உள்ளது, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாமல், இப்பகுதியில் கப்பல்கள் வரமுடியாது அதனால் விட்டுவிட்டனர். இந்தியாவில்
மொத்தம் உள்ள 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் கிட்டதட்ட இந்தியாவின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்கரை பகுதியை ஆக்கிரமிக்கிறது

கடற்கரை சமூகத்தினர் குறித்து
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இறுதி அத்தியாயத்தில் கடற்கரை சமூகத்தினர் குறித்து கூறப்பட்டுள்ளது? முதலாவதாக தேசிய அளவில் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை புள்ளி விபரங்களுடன் கூறுகிறது.

நாட்டின் 72 கடற்கரை மாவட்டங்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரைகளில் வசிக்கின்றனர். 2010 கடற்கரை மீனவர்கள் கணக்கெடுப்பின் 61 விழுக்காடு கடற்கரை மீனவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் கடன்களை வாங்கி மீள முடியாத கடன் வலைகளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி இடை நிற்பவர்களாக உள்ளனர். 88 விழுக்காட்டினருக்குத்தான் மின்வசதி உள்ளது, 27 விழுக்காட்டினருக்குத்தான் சுகாதார வசதிகள் உள்ளன. 58 விழுக்காட்டினருக்கு பஸ் வசதிகள் உள்ளன.
மீனவர்களின் அவல வாழ்வு குறித்து இவ்வளவு துல்லியமான புள்ளிவிபரங்களைக் கூறும் சாகர்மாலா தேசிய கண்ணோட்டத் திட்டம் அவர்களை முழுமையாக அழிக்கப்படபோவது குறித்து மௌனம் சாதிக்கிறது. சாகர்மாலா திட்டத்திற்கு இடையூறாக, பெரும் தடைக்கற்களாக மீனவர்கள் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்கள் (critical stakeholders) என்ற நாகரீகமான வார்த்தையின் மூலம் ஆவணம் முன்வைக்கிறது. துறைமுகம் கட்டுவதினாலும் அதன் செயல்பாடுகளிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. துறைமுக வளர்ச்சித் திட்டங்களினால் மறைமுக பாதிப்புகள் என மக்கள் இடம் பெயருதல் , கடற்ரைகள் இழப்பு, கடலுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல முடியாத நிலை மற்றும் மோசமான மறுவாழ்வு திட்டங்கள் என ஒரு சிறிய பத்தியில் போகிறபோக்கில் இத்தகைய மிகக் கடுமையான பாதிப்புகள் கூறப்பட்டுள்ளன.

திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அழிப்பதற்கு நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப்போவதாக அறிவித்துள்ளதை தவிர ஆவணத்தில் வேறு ஒன்றும் சொல்லவில்லை,
கடலோர சமுக மக்களின் மாற்று வாழ்வாதார திட்டம் எதுவும் இல்லாத நிலையில்
சாகர்மாலா
திட்டத்தில்
கூறப்பட்டுள்ள 3 திட்டங்களின் ( துறைமுகம் நவீனப்படுத்துதல் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு) இதில்
ஏற்படவுள்ள வளர்ச்சியின் பயன்களை கடலோர சமுக மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் ஏமாற்றமளிப்பாக உள்ளது.

பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?
சாகர்மாலா ,
இந்திய கார்பரேட்களின் நீண்ட கால கனவு திட்டம், மோடி தலைமையிலான பிஜேயை. ஆட்சியில் அமர வைத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு . மோடி அரசு. திரும்ப செய்யும் கைமாறு, கடல்சார் பழங்குடியின மக்களின் மீது தொடுக்கபட்ட மாபெரும் தாக்குதல்,

எனவே சாகர்மாலா போன்ற அழிவு திட்டங்களுக்கு எதிராக நெய்தல் நில மக்கள் நடத்தும் போராட்டங்களில் இதர பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவாக அணிதிரள வேண்டுகிறேன், இது கடலோர சமுக மக்களின் பிரச்சினை மட்டுமல்ல இது தேசத்தின் பிரச்சினை.

கட்டுரையாளர்:

சி.ஆர். செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொலைபேசி 9940817745