வறண்டு போகும் உள்நாட்டு
மீனவர்கள் வாழ்க்கை
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக கடல் மீன்பிடிப்பை விட, உள்நாட்டு மீன்பிடிப்பு அதிகரித்து வருகிறது,
விவசாயத்தில் மரபியல் மாற்றம் செய்த பயிர்கள் மூலம் எப்படி சாகுபடியை உயர்த்த முயற்சி செய்தார்களோ' அதே போல் உள்நாட்டு மீன் உற்பத்தியிலும் மரபியல் மாற்றம் செய்யபட்ட மீன் இனங்களை அறிமுகம் செய்ததன் விளைவாக உள்நாட்டு மீன் உற்பத்தி உயர்ந்துள்ளது,
குறிப்பாக பிற மாநிலங்களை போல் நமது மாநிலத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை, நமது மாநிலத்தின் நீர் நிலைகள் பருவ மழையை நம்பியே உள்ளது,
நமது நீர் நிலைகள் குறுகிய காலத்திலேயே வற்றி விடும் தன்மை உடையது என்பதால் அதற்கு ஏற்றார் போல் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய, அமூர்கெண்டை (Amur carp) மரபுவழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேபியா (Generically improved formed tilapia) ஜெயந்திரோகு, கெளுத்தி வகையை சேர்ந்த பங்கேசியஸ், போன்ற மீன் இனங்கள் பெரும்பாலும் வளர்க்கபடுகிறது.
தமிழகத்தில் உள்நாட்டு மீனவர்கள் இருவகையில் உள்ளனர், முதல் வகையினர் அரசின் கட்டுபாட்டில் உள்ள நீர் நிலைகளில் குத்தகை மற்றும் கூலி அடிப்படையில் மீன் பிடிப்பவர்கள், இரண்டாவது வகை சொந்தமாக
குளம் ,குட்டை வைத்து மீன்வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருபவர்கள்.
மொத்தத்தில் உள்நாட்டு மீனவர்கள் தமிழகத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர் மொத்த உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் 314 உள்ளது , இதில் 303 ஆண்கள் கூட்டுறவு சங்கத்தில் 87399 பேர் உறுப்பினராகவும்,
11 பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் 8009 பேர் உறுப்பினராகவும், மொத்தத்தில் 95408 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
உள்நாட்டு நீர்வளம்
""""""""""""""""""""""""""""""""
தமிழ் நாட்டில் மீன் வளர்ப்பிற்கு உகந்த நீர் தேக்கங்கள், பெரிய மற்றும் சிறிய பாசன குளங்கள் மற்றும் குட்டைகள்,
ஆறுகள், கழிமுகங்கள் மற்றும் இதர நீர் நிலைகளை உள்ளடக்கிய பல்வேறு உள்நாட்டு நீர் ஆதாரங்கள் 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உள்ளது.
இதில் பொதுபணிதுறையின் கீழ் 78 நீர் தேக்கங்கள் உள்ளன, இதில் மீன் உற்பத்திக்காக 61 நீர்நிலைகளை தமிழ் நாடு மீன்வளத்துறை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது மேலும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுபாட்டிலும் நீர் நிலைகள் உள்ளன ,
இவற்றில் லட்சக்கணக்கான ஏழை எளிய மீனவர்கள் நேரடியாகவும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலமாகவும் குத்தகைக்கு எடுத்து மீன்பிடி மற்றும் மீன்பாசி எடுத்து வருகின்றனர்,
இச்சூழலில் தமிழக அரசு 2011 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் அரசின் நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் உரிமையை பொது ஏல முறைக்கு கொண்டு வந்துது , இதன் விளைவாக உள்ளூர் அரசியல் ஆதிக்க சக்திகள், பண முதலைகள் கைவசம் அரசின் நீர் நிலைகள் சென்றது, பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த மீனவர்கள் புதிய குத்தகைதார்களின் கட்டுபாட்டுக்குள் சென்று ஒட்ட சுரண்டபட்டனர், பல்வேறு இடங்களில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கபட்டனர்.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் குரல் கொடுத்து,
கடந்த 2014 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர்
கே.பாலகிருஷ்ணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதில் கூறிய அன்றைய மீன்துறை அமைச்சர்
திரு ஜெயபால் அவர்கள் தனியாரின் வசம் குத்தகைக்கு நீர் நிலைகளை கொடுத்தாலும் அதில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்பட்ட மாட்டார்கள் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என உறுதியளித்தார், ஆனால் இன்று வரை அது கடைபிடிக்கவில்லை, தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை,
லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தனியாருக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் பெரிய வருவாய் அரசுக்கு வரவில்லை, இதுவரை அரசின் நீர் நிலைகள் ஐந்து வருட காலம்
குத்தகை மூலம் 35 நீர் நிலைகள் ஏலம் விடபட்டு வெறும் 30.75 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது
அரசின் மெத்தனம்
"""""""""""""""""""""""""""""""
நீலபுரட்சி, தேசிய மீன்வள கொள்கை, என அரசு பல்வேறு பெயர்களில் திட்டம் வகுப்பதாக கூறினாலும்,
இத் திட்டங்கள் யாவும் உள்நாட்டு மீனவர்களுக்கு பலண் அளிக்கவில்லை, குறிப்பாக உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க மீன் குஞ்சுகள் உற்பத்தி போதுமானது அல்ல, பருவமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு இருக்கும் உரிய காலத்தின்
போது மீன் குஞ்சுகள் கிடைப்பது இல்லை ,
மீன் குஞ்சுகள் தயாராக இருக்கும் போது நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டு போகிறது. மேலும்
மீன்களுக்கனா இரை தட்டுப்பாடு, மீன்களுக்கான இரை விலையேற்றம், மீன்களை தாக்கும் நோய் காரணிகள், ஆகியவற்றால் உள்நாட்டு மீன் உற்பத்தி கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
தமிழக நீர் நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் உள்நாட்டு மீன் 4 50 லட்சம் டன் உற்பத்தி செய்ய முடியும், இது தமிழ் நாட்டின் கடல் மீன் உற்பத்திக்கு இனையானது ஆகும்,
மேற்கண்ட
இலக்கை எட்ட 70 கோடி மீன் குஞ்சுகள் தேவை, மீன்துறைக்கு ஒதுக்கபட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை பயன்படுத்தி
2016-17 ம் ஆண்டு 64 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யபட்டது, 6 கோடி மீன் குஞ்சுகள்தான் ஒட்டு மொத்த தேவைக்கு குறைவாக உள்ளது, கடந்த காலங்கங்களை விட மீன் குஞ்சுகள் உற்பத்திகாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தேவையை பூர்த்தி செய்ததாக, மீன்துறை நிர்வாகம் கூறினாலும், இந்த ஆண்டு மீன் உற்பத்தி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது,
கடந்த 2015-16 ம் ஆண்டு தமிழக உள்நாட்டு மீன் உற்பத்தி 2.42 லட்சம் டன், இந்த ஆண்டு 2016-17 ல் 1.97 லட்சம் டன் உற்பத்தி ஆகி உள்ளது, இது கடந்த ஆண்டைவிட 0.45 லட்சம் டன் குறைவான உற்பத்தி ஆகும்.
இதன் காரணமாக தமிழ் நாட்டு மக்களுக்கான மீன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டவதுடன் , உள்நாட்டு மீனவர்கள் தங்கள் வாழ்நிலையில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
சமூக நல திட்டங்கள் புறக்கணிப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மீன்துறை வளர்ச்சிக்கென மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட திட்டங்களை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் உள்நாட்டு மீனவர்களையும் இனைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது தமிழகத்தில்தான் உள்நாட்டு மீனவர்களை எவ்விதமான சமூகநல திட்டங்களிலும் சேர்க்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக கடல்சார் மீனவர்கள் நடத்திய தொடர் போராட்ட நடவடிக்கையின் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது, இத்திட்டங்கள் அனைத்திலும் உள்நாட்டு மீனவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதே நியாயம்,
குறிப்பாக ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கபட்டு 61 நாட்கள் வேலையின்றி இருக்கும் மீனவர்களின் குடும்பம் ஒன்றுக்கு தமிழக அரசு தலா ரூ 5000 ம் வழங்குகிறது.
அதுபோல் இரண்டாவது திட்டமாக மீன்பிடி குறைவு கால நிவாரணம் கடல் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ 5000 வீதம் வழங்குகிறது, மேற்கண்ட இரண்டு நிவாரண திட்டங்களும் கடல் மீனவர்களுக்கு போதுமானது இல்லை.
ஆயினும் அத்திட்டம் உள்நாட்டு மீனவகளுக்கு வழங்குவது இல்லை,
அதற்கு அரசு கூறும் காரணம் உள்நாட்டு மீனவர்களுக்கு கடல் மீனவர்களை போல் மீன்பிடி தடைகாலம் இல்லை என்பதே, ஆனால் உன்மை நிலவரம் என்னவென்றால் வருடத்தில் ஆறுமாதங்கள் மட்டுமே நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும், கோடை காலங்களில் "அறிவிக்கபடாத மீன்பிடி தடைகாலத்தை" வறட்சி உருவாக்கிவிடுகிறது எனவே உள்நாட்டு மீனவர்களையும் மேற்கண்ட நிவாரண திட்டங்களில் இனைக்கபடுவதே நியாயம்.
தேசிய மீனவர் சேமிப்பு நிதி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஏற்கனவே கூறிய இரண்டு திட்டங்களும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது, மூன்றாவதாக உள்ள தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம் என்கிற
இத்திட்டமானது மத்திய மாநில அரசுகள் கூட்டாக சமவிகித பங்களிப்போடு அமுல்படுத்தி வரும் திட்டமாகும்,
இதன்படி ஒவ்வொரு மீனவர்களும் மாதம் ஒன்றிற்கு ரூ 175/ வீதம் 8 மாதங்களும், 9 வது மாதம் ரூ 100 / ம் ஆகமொத்தம் ரூ 1500 செலுத்த வேண்டும், இத்தொகையுடன் மத்திய அரசு ரூ 1500/ ம், மாநில அரசு ரூ 1500/ ம் சேர்த்து ரூ 4500 /, யை மீனவர்களுக்கு பட்டுவாடா செய்வார்கள்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பருவ காலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ,ஆகிய மூன்று மாதங்களிலும் இதர பல மாநிலங்களில் வேறு பல மாதங்களிலும் , கடல் சீற்றத்துடன் காணப்படும் அத்துடன் மழை புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழும், இக்காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது, இதுபோன்ற காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதுதான் தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம்,
இந்த திட்டத்திலும் உள்நாட்டு மீனவர்கள் முற்றிலும் புறக்கணிக்க பட்டுள்ளனர். கடல் மீனவர்கள் படும் துன்பதுயரம் அனைத்தும் உள்நாட்டு மீனவர்களுக்கும் பொருந்தும் என்பதால்தான், பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பு வெளியிட்டுள்ள
நீல புரட்சிகான மத்திய அரசின் வழிகாட்டும் திட்ட ஆவணத்தில், தேசிய மீனவர் மறுவாழ்வு திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் 22 ம் பக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது Saving cum Relief (for both inland and marine fishres ) மத்திய அரசின் இத்திட்டம் உள்நாட்டு மீனவர்களுக்கு சேர்த்தே' உருவாக்கப்பட்டது என்பதுதான் இதன் அர்த்தம் ஆனால் நமது தமிழக அரசு நமது உள்நாட்டு மீனவர்களை இத்திட்டத்தில் சேர்க்க மறுத்து வருகிறது.
மத்திய அரசு கூறியுள்ள அடிப்படையில்
இத் திட்டத்தை அமல்படுத்தி வரும் அண்டை மாநிலமான கேரள மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மாநிலங்களில் கடல்சார் மீனவர்களுடன் உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த விதமான சமுக திட்டங்களும் உள்நாட்டு மீனவர்களுக்கு செயல்படுத்தததால் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் பயனற்று கிடக்கிறது , நாட்டிற்கு புரதசத்து மிகுந்த உணவை உற்பத்தி செய்து தரும் உள்நாட்டு மீனவர்கள் சோர்வுற்று அவர்கள் வாழ்கை எப்போதுமே வறண்டு கிடப்பது நியாயம் இல்லை.
எனவே கடல் மீனவர்களுக்கு வழங்கபடும் சமுக நல திட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கட்டுரையாளர்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்.
இராமேஸ்வரம்
தொடர்புக்கு : 9940817745
மீனவர்கள் வாழ்க்கை
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக கடல் மீன்பிடிப்பை விட, உள்நாட்டு மீன்பிடிப்பு அதிகரித்து வருகிறது,
விவசாயத்தில் மரபியல் மாற்றம் செய்த பயிர்கள் மூலம் எப்படி சாகுபடியை உயர்த்த முயற்சி செய்தார்களோ' அதே போல் உள்நாட்டு மீன் உற்பத்தியிலும் மரபியல் மாற்றம் செய்யபட்ட மீன் இனங்களை அறிமுகம் செய்ததன் விளைவாக உள்நாட்டு மீன் உற்பத்தி உயர்ந்துள்ளது,
குறிப்பாக பிற மாநிலங்களை போல் நமது மாநிலத்தில் வற்றாத ஜீவ நதிகள் இல்லை, நமது மாநிலத்தின் நீர் நிலைகள் பருவ மழையை நம்பியே உள்ளது,
நமது நீர் நிலைகள் குறுகிய காலத்திலேயே வற்றி விடும் தன்மை உடையது என்பதால் அதற்கு ஏற்றார் போல் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைய கூடிய, அமூர்கெண்டை (Amur carp) மரபுவழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேபியா (Generically improved formed tilapia) ஜெயந்திரோகு, கெளுத்தி வகையை சேர்ந்த பங்கேசியஸ், போன்ற மீன் இனங்கள் பெரும்பாலும் வளர்க்கபடுகிறது.
தமிழகத்தில் உள்நாட்டு மீனவர்கள் இருவகையில் உள்ளனர், முதல் வகையினர் அரசின் கட்டுபாட்டில் உள்ள நீர் நிலைகளில் குத்தகை மற்றும் கூலி அடிப்படையில் மீன் பிடிப்பவர்கள், இரண்டாவது வகை சொந்தமாக
குளம் ,குட்டை வைத்து மீன்வளர்ப்பு முறையில் ஈடுபட்டு வருபவர்கள்.
மொத்தத்தில் உள்நாட்டு மீனவர்கள் தமிழகத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர் மொத்த உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் 314 உள்ளது , இதில் 303 ஆண்கள் கூட்டுறவு சங்கத்தில் 87399 பேர் உறுப்பினராகவும்,
11 பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் 8009 பேர் உறுப்பினராகவும், மொத்தத்தில் 95408 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
உள்நாட்டு நீர்வளம்
""""""""""""""""""""""""""""""""
தமிழ் நாட்டில் மீன் வளர்ப்பிற்கு உகந்த நீர் தேக்கங்கள், பெரிய மற்றும் சிறிய பாசன குளங்கள் மற்றும் குட்டைகள்,
ஆறுகள், கழிமுகங்கள் மற்றும் இதர நீர் நிலைகளை உள்ளடக்கிய பல்வேறு உள்நாட்டு நீர் ஆதாரங்கள் 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உள்ளது.
இதில் பொதுபணிதுறையின் கீழ் 78 நீர் தேக்கங்கள் உள்ளன, இதில் மீன் உற்பத்திக்காக 61 நீர்நிலைகளை தமிழ் நாடு மீன்வளத்துறை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது மேலும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுபாட்டிலும் நீர் நிலைகள் உள்ளன ,
இவற்றில் லட்சக்கணக்கான ஏழை எளிய மீனவர்கள் நேரடியாகவும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலமாகவும் குத்தகைக்கு எடுத்து மீன்பிடி மற்றும் மீன்பாசி எடுத்து வருகின்றனர்,
இச்சூழலில் தமிழக அரசு 2011 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் அரசின் நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் உரிமையை பொது ஏல முறைக்கு கொண்டு வந்துது , இதன் விளைவாக உள்ளூர் அரசியல் ஆதிக்க சக்திகள், பண முதலைகள் கைவசம் அரசின் நீர் நிலைகள் சென்றது, பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த மீனவர்கள் புதிய குத்தகைதார்களின் கட்டுபாட்டுக்குள் சென்று ஒட்ட சுரண்டபட்டனர், பல்வேறு இடங்களில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கபட்டனர்.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் குரல் கொடுத்து,
கடந்த 2014 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர்
கே.பாலகிருஷ்ணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதில் கூறிய அன்றைய மீன்துறை அமைச்சர்
திரு ஜெயபால் அவர்கள் தனியாரின் வசம் குத்தகைக்கு நீர் நிலைகளை கொடுத்தாலும் அதில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்பட்ட மாட்டார்கள் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என உறுதியளித்தார், ஆனால் இன்று வரை அது கடைபிடிக்கவில்லை, தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இது வரை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை,
லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தனியாருக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் பெரிய வருவாய் அரசுக்கு வரவில்லை, இதுவரை அரசின் நீர் நிலைகள் ஐந்து வருட காலம்
குத்தகை மூலம் 35 நீர் நிலைகள் ஏலம் விடபட்டு வெறும் 30.75 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது
அரசின் மெத்தனம்
"""""""""""""""""""""""""""""""
நீலபுரட்சி, தேசிய மீன்வள கொள்கை, என அரசு பல்வேறு பெயர்களில் திட்டம் வகுப்பதாக கூறினாலும்,
இத் திட்டங்கள் யாவும் உள்நாட்டு மீனவர்களுக்கு பலண் அளிக்கவில்லை, குறிப்பாக உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க மீன் குஞ்சுகள் உற்பத்தி போதுமானது அல்ல, பருவமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு இருக்கும் உரிய காலத்தின்
போது மீன் குஞ்சுகள் கிடைப்பது இல்லை ,
மீன் குஞ்சுகள் தயாராக இருக்கும் போது நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டு போகிறது. மேலும்
மீன்களுக்கனா இரை தட்டுப்பாடு, மீன்களுக்கான இரை விலையேற்றம், மீன்களை தாக்கும் நோய் காரணிகள், ஆகியவற்றால் உள்நாட்டு மீன் உற்பத்தி கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
தமிழக நீர் நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் உள்நாட்டு மீன் 4 50 லட்சம் டன் உற்பத்தி செய்ய முடியும், இது தமிழ் நாட்டின் கடல் மீன் உற்பத்திக்கு இனையானது ஆகும்,
மேற்கண்ட
இலக்கை எட்ட 70 கோடி மீன் குஞ்சுகள் தேவை, மீன்துறைக்கு ஒதுக்கபட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை பயன்படுத்தி
2016-17 ம் ஆண்டு 64 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யபட்டது, 6 கோடி மீன் குஞ்சுகள்தான் ஒட்டு மொத்த தேவைக்கு குறைவாக உள்ளது, கடந்த காலங்கங்களை விட மீன் குஞ்சுகள் உற்பத்திகாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தேவையை பூர்த்தி செய்ததாக, மீன்துறை நிர்வாகம் கூறினாலும், இந்த ஆண்டு மீன் உற்பத்தி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது,
கடந்த 2015-16 ம் ஆண்டு தமிழக உள்நாட்டு மீன் உற்பத்தி 2.42 லட்சம் டன், இந்த ஆண்டு 2016-17 ல் 1.97 லட்சம் டன் உற்பத்தி ஆகி உள்ளது, இது கடந்த ஆண்டைவிட 0.45 லட்சம் டன் குறைவான உற்பத்தி ஆகும்.
இதன் காரணமாக தமிழ் நாட்டு மக்களுக்கான மீன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டவதுடன் , உள்நாட்டு மீனவர்கள் தங்கள் வாழ்நிலையில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
சமூக நல திட்டங்கள் புறக்கணிப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மீன்துறை வளர்ச்சிக்கென மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட திட்டங்களை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் உள்நாட்டு மீனவர்களையும் இனைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது தமிழகத்தில்தான் உள்நாட்டு மீனவர்களை எவ்விதமான சமூகநல திட்டங்களிலும் சேர்க்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக கடல்சார் மீனவர்கள் நடத்திய தொடர் போராட்ட நடவடிக்கையின் விளைவாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது, இத்திட்டங்கள் அனைத்திலும் உள்நாட்டு மீனவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதே நியாயம்,
குறிப்பாக ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கபட்டு 61 நாட்கள் வேலையின்றி இருக்கும் மீனவர்களின் குடும்பம் ஒன்றுக்கு தமிழக அரசு தலா ரூ 5000 ம் வழங்குகிறது.
அதுபோல் இரண்டாவது திட்டமாக மீன்பிடி குறைவு கால நிவாரணம் கடல் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ 5000 வீதம் வழங்குகிறது, மேற்கண்ட இரண்டு நிவாரண திட்டங்களும் கடல் மீனவர்களுக்கு போதுமானது இல்லை.
ஆயினும் அத்திட்டம் உள்நாட்டு மீனவகளுக்கு வழங்குவது இல்லை,
அதற்கு அரசு கூறும் காரணம் உள்நாட்டு மீனவர்களுக்கு கடல் மீனவர்களை போல் மீன்பிடி தடைகாலம் இல்லை என்பதே, ஆனால் உன்மை நிலவரம் என்னவென்றால் வருடத்தில் ஆறுமாதங்கள் மட்டுமே நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும், கோடை காலங்களில் "அறிவிக்கபடாத மீன்பிடி தடைகாலத்தை" வறட்சி உருவாக்கிவிடுகிறது எனவே உள்நாட்டு மீனவர்களையும் மேற்கண்ட நிவாரண திட்டங்களில் இனைக்கபடுவதே நியாயம்.
தேசிய மீனவர் சேமிப்பு நிதி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஏற்கனவே கூறிய இரண்டு திட்டங்களும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது, மூன்றாவதாக உள்ள தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம் என்கிற
இத்திட்டமானது மத்திய மாநில அரசுகள் கூட்டாக சமவிகித பங்களிப்போடு அமுல்படுத்தி வரும் திட்டமாகும்,
இதன்படி ஒவ்வொரு மீனவர்களும் மாதம் ஒன்றிற்கு ரூ 175/ வீதம் 8 மாதங்களும், 9 வது மாதம் ரூ 100 / ம் ஆகமொத்தம் ரூ 1500 செலுத்த வேண்டும், இத்தொகையுடன் மத்திய அரசு ரூ 1500/ ம், மாநில அரசு ரூ 1500/ ம் சேர்த்து ரூ 4500 /, யை மீனவர்களுக்கு பட்டுவாடா செய்வார்கள்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பருவ காலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ,ஆகிய மூன்று மாதங்களிலும் இதர பல மாநிலங்களில் வேறு பல மாதங்களிலும் , கடல் சீற்றத்துடன் காணப்படும் அத்துடன் மழை புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழும், இக்காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது, இதுபோன்ற காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதுதான் தேசிய மீனவர் சேமிப்பு நிதி மற்றும் நிவாரண திட்டம்,
இந்த திட்டத்திலும் உள்நாட்டு மீனவர்கள் முற்றிலும் புறக்கணிக்க பட்டுள்ளனர். கடல் மீனவர்கள் படும் துன்பதுயரம் அனைத்தும் உள்நாட்டு மீனவர்களுக்கும் பொருந்தும் என்பதால்தான், பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பு வெளியிட்டுள்ள
நீல புரட்சிகான மத்திய அரசின் வழிகாட்டும் திட்ட ஆவணத்தில், தேசிய மீனவர் மறுவாழ்வு திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் 22 ம் பக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது Saving cum Relief (for both inland and marine fishres ) மத்திய அரசின் இத்திட்டம் உள்நாட்டு மீனவர்களுக்கு சேர்த்தே' உருவாக்கப்பட்டது என்பதுதான் இதன் அர்த்தம் ஆனால் நமது தமிழக அரசு நமது உள்நாட்டு மீனவர்களை இத்திட்டத்தில் சேர்க்க மறுத்து வருகிறது.
மத்திய அரசு கூறியுள்ள அடிப்படையில்
இத் திட்டத்தை அமல்படுத்தி வரும் அண்டை மாநிலமான கேரள மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மாநிலங்களில் கடல்சார் மீனவர்களுடன் உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த விதமான சமுக திட்டங்களும் உள்நாட்டு மீனவர்களுக்கு செயல்படுத்தததால் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் பயனற்று கிடக்கிறது , நாட்டிற்கு புரதசத்து மிகுந்த உணவை உற்பத்தி செய்து தரும் உள்நாட்டு மீனவர்கள் சோர்வுற்று அவர்கள் வாழ்கை எப்போதுமே வறண்டு கிடப்பது நியாயம் இல்லை.
எனவே கடல் மீனவர்களுக்கு வழங்கபடும் சமுக நல திட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கட்டுரையாளர்
சி.ஆர்.செந்தில்வேல்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்.
இராமேஸ்வரம்
தொடர்புக்கு : 9940817745
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக