ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.
புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறது.
புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு யுனோஸ்கோ அமைப்பு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2019, ம் ஆண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது, இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டு புத்தக மாநாடு கொண்டாடப்பட உள்ளது.
எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குவை சுவர்களிலும் இஷாங்கோ (Ishango) எலும்புகளிலிருந்து தான் இவை சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன இதன் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக களிமண் கலவைகளாலும், மரப்பட்டைகளிலும், விலங்குகளின் தோளிலும் ஓலைச்சுவடிகளில்,காகிதத்ங்களில், எழுதப்பட்டது... இவை அனைத்துமே புத்தகங்கள்தான், வரலாற்று பதிவுகள்தான்.
அறிஞர்கள் கூறுவது ஒன்றே! அது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. இவர்களின் தத்துவங்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தத்துவங்களை நாம் தெரிந்துகொள்ள இவர்களை வாசிக்கவேண்டும். காலையில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்று நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன்னுடைய வாசிப்பில் மெய்மரந்த அம்பேத்கரால் தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது. நமது நாட்டை ஆட்சி செய்த பல அரசியல் தலைவர்களும் இலக்கிய ஞானம் பெற்றவர்களே. காரணம் அவர்களிடம் இருந்த வாசிப்பு பழக்கமே. இந்த சமூகத்தில் நமக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உருவாக்கிக்கொள்ள வாசிப்புதான் உதவும்.
அண்ணாதுரை
புத்தகம் படித்து முடித்தபிறகு தான் இருதய அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.
நேரு
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்'
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்:
'என் கல்லறையில் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது'
---
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது ?
'புத்தகம்'
உலகம் முழுவதும்
விஞ்ஞான வளர்ச்சி, மீடியாக்களின் தாக்கம் என்று பல்வேறு காரணங்களால் இன்று புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மாணவர்களும், இளைஞர்களும், முதியவர்களும் கூட தங்களது பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனுடன் செலவிடுகின்றனர். சமுக ஊடகங்கள் மூலம் உலகில் நடக்கும் நிகழ்வுகள் ஓரிரு நிமிடங்களில் தங்களது விரல் நுனிகளில் கிடைத்து விடுகிறது என்பது உண்மை. எனினும், புத்தகங்களை வாசிப்பதற்கும் சமூக ஊடகங்கள் மூலம் வாசிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வது மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும் இதை ஊக்கப்படுத்த முழு அக்கறை காட்டவில்லை எனவும், பாடங்களை படிக்க மட்டுமே அதிக கவனம் செலுத்துவதும் இதற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. படைப்பாளிகளும் தங்களது படைப்புகளை வெளியிட பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால், புத்தகங்களை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு செல்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தமிழகத்தில் புத்தக வாசிப்புக்கான நம்பிக்கையூட்டும் வகையில்.. எப்படி தொன்னுறுகளில் அறிவொளி இயக்கம் வாசிப்பின் மகத்துவத்தை கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சென்றதோ ....
அதேபோல்
கடந்த 10 ஆண்டுகளில்
பெரும்பாலன நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் வருடம் தோரும் நடைபெருகின்றன. அங்கே குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாங்கிச் செல்கின்றனர். அங்கே குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், என அனைவருக்கும் ஏற்றபுத்தகங்கள் அனைத்துத் தலைப்புகளிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன. காரணம் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைவரும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே. என்னதான் டிஜிட்டல் வேர்ல்டு என்று சொன்னாலும் புத்தகத்தின் இடத்தை எவையும் பதிலீடு செய்ய இயலாது. எனவே வாசிப்பின் வரப்பிரசாதமாக இன்று புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன.
உங்களை புரட்டிப் போட்டு விடும் புத்தகம் ஒருநாள் கிடைக்கும். அந்தநேரம் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும்.
"அதற்கொரு நிபந்தனை". அதை தேட வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தபுத்தகத்தில் எந்த பேருண்மை வந்து உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுமோ … யாராலும் சொல்ல முடியாது. தினமும் பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்போம்.
தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்
புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறது.
புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு யுனோஸ்கோ அமைப்பு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2019, ம் ஆண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் தலைநகரான ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டது, இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டு புத்தக மாநாடு கொண்டாடப்பட உள்ளது.
எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குவை சுவர்களிலும் இஷாங்கோ (Ishango) எலும்புகளிலிருந்து தான் இவை சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன இதன் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக களிமண் கலவைகளாலும், மரப்பட்டைகளிலும், விலங்குகளின் தோளிலும் ஓலைச்சுவடிகளில்,காகிதத்ங்களில், எழுதப்பட்டது... இவை அனைத்துமே புத்தகங்கள்தான், வரலாற்று பதிவுகள்தான்.
அறிஞர்கள் கூறுவது ஒன்றே! அது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. இவர்களின் தத்துவங்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தத்துவங்களை நாம் தெரிந்துகொள்ள இவர்களை வாசிக்கவேண்டும். காலையில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்று நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன்னுடைய வாசிப்பில் மெய்மரந்த அம்பேத்கரால் தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது. நமது நாட்டை ஆட்சி செய்த பல அரசியல் தலைவர்களும் இலக்கிய ஞானம் பெற்றவர்களே. காரணம் அவர்களிடம் இருந்த வாசிப்பு பழக்கமே. இந்த சமூகத்தில் நமக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உருவாக்கிக்கொள்ள வாசிப்புதான் உதவும்.
அண்ணாதுரை
புத்தகம் படித்து முடித்தபிறகு தான் இருதய அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.
நேரு
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்'
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்:
'என் கல்லறையில் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது'
---
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது ?
'புத்தகம்'
உலகம் முழுவதும்
விஞ்ஞான வளர்ச்சி, மீடியாக்களின் தாக்கம் என்று பல்வேறு காரணங்களால் இன்று புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மாணவர்களும், இளைஞர்களும், முதியவர்களும் கூட தங்களது பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனுடன் செலவிடுகின்றனர். சமுக ஊடகங்கள் மூலம் உலகில் நடக்கும் நிகழ்வுகள் ஓரிரு நிமிடங்களில் தங்களது விரல் நுனிகளில் கிடைத்து விடுகிறது என்பது உண்மை. எனினும், புத்தகங்களை வாசிப்பதற்கும் சமூக ஊடகங்கள் மூலம் வாசிப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வது மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும் இதை ஊக்கப்படுத்த முழு அக்கறை காட்டவில்லை எனவும், பாடங்களை படிக்க மட்டுமே அதிக கவனம் செலுத்துவதும் இதற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. படைப்பாளிகளும் தங்களது படைப்புகளை வெளியிட பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால், புத்தகங்களை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு செல்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தமிழகத்தில் புத்தக வாசிப்புக்கான நம்பிக்கையூட்டும் வகையில்.. எப்படி தொன்னுறுகளில் அறிவொளி இயக்கம் வாசிப்பின் மகத்துவத்தை கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சென்றதோ ....
அதேபோல்
கடந்த 10 ஆண்டுகளில்
பெரும்பாலன நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் வருடம் தோரும் நடைபெருகின்றன. அங்கே குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாங்கிச் செல்கின்றனர். அங்கே குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், என அனைவருக்கும் ஏற்றபுத்தகங்கள் அனைத்துத் தலைப்புகளிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன. காரணம் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைவரும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே. என்னதான் டிஜிட்டல் வேர்ல்டு என்று சொன்னாலும் புத்தகத்தின் இடத்தை எவையும் பதிலீடு செய்ய இயலாது. எனவே வாசிப்பின் வரப்பிரசாதமாக இன்று புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன.
உங்களை புரட்டிப் போட்டு விடும் புத்தகம் ஒருநாள் கிடைக்கும். அந்தநேரம் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும்.
"அதற்கொரு நிபந்தனை". அதை தேட வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தபுத்தகத்தில் எந்த பேருண்மை வந்து உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுமோ … யாராலும் சொல்ல முடியாது. தினமும் பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்போம்.
தோழமையுடன்
சி.ஆர்.செந்தில்வேல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக