சாகர்மாலா , நெய்தல் குடிகளின் பேரழிவு திட்டம்
"""""""""""""""""""""""""""""""""""""""""
வறுமையில்
வாடும் 30 கோடி இந்திய மக்களின் முன்னேற்றம் குறித்து பேசாத மோடி, அன்னிய மற்றும் இந்திய கார்பரேட்களின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும் நோக்குடன், மேக் இன் இந்தியா, ஸ்டார் ஆப் இன்டியா, தூய்மை இந்திய, ஸ்கில் இன்டியா, இதன் வரிசையில் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டுவரபட உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் திட்டம்தான் சாகர்மாலா ( கடல் மாலை ) திட்டம். சீனாவின் முத்துமாலை திட்டத்தை காப்பியடித்து செய்யபடுகிறது.
இத்திட்டம் 2003 ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் முன்மொழியபட்டு கிடப்பில் போடப்பட்டது, தற்போது 2015 மார்ச் 25 ல் மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, இதனை அமுல்படுத்தும் போது வரும் எதிர்ப்பை சமாளிக்க ஓர் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை என்ற முறையில், சாகர்மாலா உச்சநிலை கமிட்டி (SAGAR MALA APEX COMMITTEE )அதன் கீழ் சாகர்மாலா டெவலப்மென்ட் கம்பெனி என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதை இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதியபட்டது, இந்த அமைப்புக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார்,
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது பாதிக்கப்படும் மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க வலிமை மிக்க அமைப்பாக சாகர்மாலா கம்பெனி அமையும், இதில் மத்திய
மாநில அரசுகளோ கீழ்மட்ட அரசின் நிர்வாகங்களோ தலையிட முடியாத
வகையில், கம்பெனிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இக் கம்பெனியை அமைத்தது மத்திய அரசாக இருந்தாலும், இந்த கம்பெனியை இனிமேல் நிர்வகிக்க போவது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான், அரசு
ஒரு குறைந்த அளவு முதலீடு
செய்து விட்டு அதில் கிடைக்கும் லாபத்தில் முதலீட்டுகான பங்கைப் ஒரு பங்குதாரர் என்ற முறையில் அரசு பெற்று கொண்டு ஒதுக்கி விடும் முழுக்க முழுக்க அன்னிய இந்திய மூலதனத்தில்தான் இக்கம்பெனி செயல்படும், இதில் கிடைக்கும் லாபத்தையும் துறைமுக சேவைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் கம்பெனி சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, பெயரளவில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார் ஆனால் பெரு முதலீடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குனர்களே கம்பெனியை வழிநடத்துவார்கள், கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியை எப்படி வடிவமைத்து அதிகாரம் வழங்கியதோ, அதே முறையை பின்பற்றி சாகர்மாலா கம்பெனிக்கும் இந்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திம் நான்கு அம்சங்களை கொண்டது, ஒன்று பழைய துறைமுகங்களை நவீனமாக்குவது , புதிய துறைமுகங்களை உருவாக்குவது ,
இரண்டு வான்வழி, தரைவழி. நதிவழி, ரயில்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது ,
மூன்று துறைமுகம் சார்ந்த ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார மண்டலம் அமைப்பது.
நான்கு கடல்சார் சமூகங்களின் மாற்று வாழ்வாதார திட்டம் குறித்து.
இத்திட்டத்தை நிறைவேற்ற மொத்தத்தில் எட்டு லட்சம் கோடி தேவை எனவும், இத்திட்டம் நிறைவேற்றினால் 2020 க்குள் ரூ 110 பில்லியன் அளவுக்கு சரக்கு ஏற்றுமதியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் 400 மேற்பட்ட திட்டங்கள் உள்ளது, நாற்பது லட்சம் பேருக்கு நேரடியாகவும் அறுபது லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்குமென ஆசை வார்த்தை கூறபடுகிறது,
துறைமுக கட்டமைப்பை மேம்படுத்துவது
""""""""""""""""""""""""""""""""""""""""""
துறைமுகங்களை மேம்படுத்துவதே
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அறிக்கை கூறுகிறது ,
அதனடிப்படையில் ரூபாய் 91434 கோடி முதலீட்டில், 12 பெரிய துறைமுகங்களையும் , 142 சிறிய துறைமுகங்களையும் , நவீனபடுத்தி சர்வதேச தரத்திற்கு சரக்கு பெட்டகங்களை கையாள்வது, இதன் தொடர்ச்சியாக
மராட்டிய மாநிலத்தில் வதவன், கர்நாடக மாநிலத்தில் பெலிகிரி, தமிழகத்தில் இணையம் தற்போது குளச்சல் கோவலம், மற்றும் சீர்காழி, ஒரிசாவில் பாரதீப் வெளி துறைமுகம், மேற்கு வங்கத்தில் சாகர் தீவு, உள்ளிட்ட
ஆறு புதிய துறைமுகங்கள் அமைப்பது இதற்கான ஒப்புதலை 5-7-2016 ல் மத்திய அரசு வழங்கியது.
புதிய துறைமுகங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்பது உன்மையே, ஆனால் அவற்றை அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் செய்யும் போது தான் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுபாட்டில் துறைமுகங்கள் செல்லும் என்றால், நாட்டில் உள்ள சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் மண்டியிட்டு கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு வழிகோலாது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும், இந்திய துறைமுகங்களை நேரடியாக தனியாரிடம் தாரைவார்க்காமல், கொல்லைபுறம் வழியாக தனியார் வசம் கொடுப்பதே சாகர்மாலா திட்டம் என்கிற சாகசம், சாகர்மாலா கம்பெனிக்கு பின்னால் ஒழிந்திருக்கும் கார்ப்ரேட்டுகள் புதிய துறைமுகங்களை அமைக்கவும், பழைய துறைமுகங்களை நவீனமாக்கும் நடவடிக்கை என்கிற பெயரில் முதலீடு செய்து நாட்டில் உள்ள அனைத்து துறைமுக கட்டமைப்பை தங்கள் வசம் கொண்டு செல்ல எடுக்கப்படும் நவீன உத்தியே சாகர்மாலா திட்டம்.
துறைமுகங்கள் இணைப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இருப்புபாதை , தரைவழி, வான்வழி, உள்நாட்டு நீர்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது
இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய நோக்கம் என்கிறது திட்ட அறிக்கை, இதில் இந்திய ரயில்வே துறை நிர்வாகம் சாராமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில், இந்திய துறைமுக ரயில்வே கம்பெனி என்ற நிறுவனத்தை 10 -7-2016 அன்று துவங்கி,
அதை இந்திய கம்பெனி சட்டம் 2013 கீழ் பதிவு செய்து தற்போது 9 துறைமுகங்களை இணைக்கும் வகையில் 3300 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்புபாதை அமைக்க 25 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது,
இவற்றை நிறைவேற்ற தேவையான ரூ 28000 கோடி முதலீடை அன்னிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் திரட்ட போவதாக திட்ட அறிக்கை கூறுகின்றது .
சாலைகளை புதிதாக அமைத்தல், விரிவுபடுத்துதல் என்ற வகையில் 79 சாலைகள் சாகர்மாலா திட்டத்தின் கீழும், 45 திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலை துறை கொண்டு வந்துள்ள பாரத்மாலா திட்டத்தின் மூலமாக செய்யபடும் என அறிக்கை கூறுகின்றது.
இத்துடன் எரிவாயு மற்றும் எாிபொருள் போன்ற திரவ பொருட்களை நாடு முழுக்க கொண்டு செல்ல குழாய் அமைப்பது.
குறிப்பாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்கு பெட்டகங்களை கையாள்வது, காரணம் தரைவழியை விட நீர்வழி போக்குவரத்து, பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால், மத்திய மோடி அரசு கடந்த 10-3-2016 அன்று உள்நாட்டு நீர்வழி மசோதா 1982 யை திருத்தம் செய்து, தேசிய நீர்வழி மசோதா 2016, என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது,
ஏற்கனவே இந்தியாவில் கங்கை, பாகிரதி, ஹீக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ண -கோதாவரி, நதிகள் கேரளத்தில் உள்ள சம்பகார மற்றும் உத்யோக் மண்டல கால்வாய் உள்ளிட்ட ஐந்து வழி தடங்களில் உள்நாட்டு போக்குவரத்து உள்ளது .
இந்த ஐந்து வழி தடங்களை மேம்படுத்துவது, அத்துடன் புதிதாக 106 நதிகளையும் உள்ளடக்கி, 111 நதிகளில்
உள்நாட்டு போக்குவரத்தை துவங்குவது என மசோதா கூறுகிறது, இதனடிப்படையில், தமிழகத்திலுள்ள கீழ்கண்ட ஏழு நதிகளில் உள்நாட்டு நீர்வழி தடம் அறிவிக்கப்பட்டுள்ளது,
1, காவிரி-கொல்லிட நதிகளில் , ஈரோடு மாவட்டம் உரச்சிகோட்டை துவங்கி, நாகை மாவட்டம் பழையாறு கடற்கரை வரையிலும்,
2, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை துவங்கி அம்பாசமுத்திரம் அலயூர் வரையும்,
3, பாலாற்றில் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ரயில்பாலம் துவங்கி , காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்க பட்டிணம் கடற்கரை வரை.
4,பழையாற்றில் குமரி மாவட்டம் வீரநாராயணமங்களம் துவங்கி மணக்குடி கடற்கரை வரை.
5, பொன்னி ஆற்றில் சாத்தனூர் அணை முதல் கடலூர் துறைமுகம் வரை,
6, தாமிரபரணி ஆற்றில் நெல்லை நகரில் துவங்கி , தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கடற்கரை வரை,
7, வைகை நதியில் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி முதல் மதுரை மாவட்டம் விரகனூர் வரை.
மேற்கண்ட நீர்வழி பாதைகள் சாதாரண மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டமில்லை, முழுக்க முழுக்க இந்திய மற்றும் பன்னாடு நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது,
இதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யவில்லை, விவசாயிகள் பாசனங்களுக்கு நீரை பயன்படுத்துவதில், உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பு செய்வதிலும் ஏற்படும் சிரமங்களை பற்றி அறிக்கையில் எதுவும் கூறவில்லை,
இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் மாட்டார்கள்
மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்தார் , இதன் உள்ளடக்கமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை மற்றும் நதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியே ,
நாட்டில் உள்ள நதிகளின் மீதான மாநில அரசுகளுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமைகளையும், மோடி அரசு ஒரே ஒரு மசோதாவான உள் நாட்டு நீர்வழி மசோதா மூலம் பறித்துக் கொண்டது,
கடற்கரைசார் தொழில் மண்டலம்
"""""""""""""
தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்,
சாகர்மாலா திட்டத்தின்
தொடர்ச்சியாக மிக முக்கியமான ஒன்றாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கடற்கரையோர சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,
இந்தியாவில் 14 மண்டலங்கள் அமைக்கபடவுள்ளது , அதில் மூன்று மண்டலம் தமிழகத்தில் அமையவுள்ளது.
1,மன்னார் வளைகுடா மண்டலம், தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கியது.
2, பூம்புகார் மண்டலம், கடலூர் துறைமுகத்துடன் இணைக்கும் வகையில், கடலூர், பெரம்பலூர், அரியலூர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஐ உள்ளடக்கியது,
3, VCIC தென் மண்டலம், ( VENTURE CAPITAL INVESTMENT COMPETITION )
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர் , காஞ்சீபுரம் மாவட்டங்களைச் உள்ளடக்கியது,
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை தவிர தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை இதில் விடுவிக்க காரணம் இப்பகுதியில் ஆதம் பாலம் உள்ளது, மணல்மேடுகள் கடலில் அதிக அளவில் உள்ளது, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாமல், இப்பகுதியில் கப்பல்கள் வரமுடியாது அதனால் விட்டுவிட்டனர். இந்தியாவில்
மொத்தம் உள்ள 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் கிட்டதட்ட இந்தியாவின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்கரை பகுதியை ஆக்கிரமிக்கிறது
கடற்கரை சமூகத்தினர் குறித்து
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இறுதி அத்தியாயத்தில் கடற்கரை சமூகத்தினர் குறித்து கூறப்பட்டுள்ளது? முதலாவதாக தேசிய அளவில் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை புள்ளி விபரங்களுடன் கூறுகிறது.
நாட்டின் 72 கடற்கரை மாவட்டங்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரைகளில் வசிக்கின்றனர். 2010 கடற்கரை மீனவர்கள் கணக்கெடுப்பின் 61 விழுக்காடு கடற்கரை மீனவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் கடன்களை வாங்கி மீள முடியாத கடன் வலைகளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி இடை நிற்பவர்களாக உள்ளனர். 88 விழுக்காட்டினருக்குத்தான் மின்வசதி உள்ளது, 27 விழுக்காட்டினருக்குத்தான் சுகாதார வசதிகள் உள்ளன. 58 விழுக்காட்டினருக்கு பஸ் வசதிகள் உள்ளன.
மீனவர்களின் அவல வாழ்வு குறித்து இவ்வளவு துல்லியமான புள்ளிவிபரங்களைக் கூறும் சாகர்மாலா தேசிய கண்ணோட்டத் திட்டம் அவர்களை முழுமையாக அழிக்கப்படபோவது குறித்து மௌனம் சாதிக்கிறது. சாகர்மாலா திட்டத்திற்கு இடையூறாக, பெரும் தடைக்கற்களாக மீனவர்கள் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்கள் (critical stakeholders) என்ற நாகரீகமான வார்த்தையின் மூலம் ஆவணம் முன்வைக்கிறது. துறைமுகம் கட்டுவதினாலும் அதன் செயல்பாடுகளிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. துறைமுக வளர்ச்சித் திட்டங்களினால் மறைமுக பாதிப்புகள் என மக்கள் இடம் பெயருதல் , கடற்ரைகள் இழப்பு, கடலுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல முடியாத நிலை மற்றும் மோசமான மறுவாழ்வு திட்டங்கள் என ஒரு சிறிய பத்தியில் போகிறபோக்கில் இத்தகைய மிகக் கடுமையான பாதிப்புகள் கூறப்பட்டுள்ளன.
திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அழிப்பதற்கு நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப்போவதாக அறிவித்துள்ளதை தவிர ஆவணத்தில் வேறு ஒன்றும் சொல்லவில்லை,
கடலோர சமுக மக்களின் மாற்று வாழ்வாதார திட்டம் எதுவும் இல்லாத நிலையில்
சாகர்மாலா
திட்டத்தில்
கூறப்பட்டுள்ள 3 திட்டங்களின் ( துறைமுகம் நவீனப்படுத்துதல் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு) இதில்
ஏற்படவுள்ள வளர்ச்சியின் பயன்களை கடலோர சமுக மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் ஏமாற்றமளிப்பாக உள்ளது.
பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?
சாகர்மாலா ,
இந்திய கார்பரேட்களின் நீண்ட கால கனவு திட்டம், மோடி தலைமையிலான பிஜேயை. ஆட்சியில் அமர வைத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு . மோடி அரசு. திரும்ப செய்யும் கைமாறு, கடல்சார் பழங்குடியின மக்களின் மீது தொடுக்கபட்ட மாபெரும் தாக்குதல்,
எனவே சாகர்மாலா போன்ற அழிவு திட்டங்களுக்கு எதிராக நெய்தல் நில மக்கள் நடத்தும் போராட்டங்களில் இதர பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவாக அணிதிரள வேண்டுகிறேன், இது கடலோர சமுக மக்களின் பிரச்சினை மட்டுமல்ல இது தேசத்தின் பிரச்சினை.
கட்டுரையாளர்:
சி.ஆர். செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொலைபேசி 9940817745
"""""""""""""""""""""""""""""""""""""""""
வறுமையில்
வாடும் 30 கோடி இந்திய மக்களின் முன்னேற்றம் குறித்து பேசாத மோடி, அன்னிய மற்றும் இந்திய கார்பரேட்களின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும் நோக்குடன், மேக் இன் இந்தியா, ஸ்டார் ஆப் இன்டியா, தூய்மை இந்திய, ஸ்கில் இன்டியா, இதன் வரிசையில் மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டுவரபட உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் திட்டம்தான் சாகர்மாலா ( கடல் மாலை ) திட்டம். சீனாவின் முத்துமாலை திட்டத்தை காப்பியடித்து செய்யபடுகிறது.
இத்திட்டம் 2003 ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் முன்மொழியபட்டு கிடப்பில் போடப்பட்டது, தற்போது 2015 மார்ச் 25 ல் மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, இதனை அமுல்படுத்தும் போது வரும் எதிர்ப்பை சமாளிக்க ஓர் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை என்ற முறையில், சாகர்மாலா உச்சநிலை கமிட்டி (SAGAR MALA APEX COMMITTEE )அதன் கீழ் சாகர்மாலா டெவலப்மென்ட் கம்பெனி என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதை இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதியபட்டது, இந்த அமைப்புக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார்,
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது பாதிக்கப்படும் மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க வலிமை மிக்க அமைப்பாக சாகர்மாலா கம்பெனி அமையும், இதில் மத்திய
மாநில அரசுகளோ கீழ்மட்ட அரசின் நிர்வாகங்களோ தலையிட முடியாத
வகையில், கம்பெனிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இக் கம்பெனியை அமைத்தது மத்திய அரசாக இருந்தாலும், இந்த கம்பெனியை இனிமேல் நிர்வகிக்க போவது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான், அரசு
ஒரு குறைந்த அளவு முதலீடு
செய்து விட்டு அதில் கிடைக்கும் லாபத்தில் முதலீட்டுகான பங்கைப் ஒரு பங்குதாரர் என்ற முறையில் அரசு பெற்று கொண்டு ஒதுக்கி விடும் முழுக்க முழுக்க அன்னிய இந்திய மூலதனத்தில்தான் இக்கம்பெனி செயல்படும், இதில் கிடைக்கும் லாபத்தையும் துறைமுக சேவைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் கம்பெனி சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, பெயரளவில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமை தாங்குவார் ஆனால் பெரு முதலீடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குனர்களே கம்பெனியை வழிநடத்துவார்கள், கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியை எப்படி வடிவமைத்து அதிகாரம் வழங்கியதோ, அதே முறையை பின்பற்றி சாகர்மாலா கம்பெனிக்கும் இந்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திம் நான்கு அம்சங்களை கொண்டது, ஒன்று பழைய துறைமுகங்களை நவீனமாக்குவது , புதிய துறைமுகங்களை உருவாக்குவது ,
இரண்டு வான்வழி, தரைவழி. நதிவழி, ரயில்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது ,
மூன்று துறைமுகம் சார்ந்த ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார மண்டலம் அமைப்பது.
நான்கு கடல்சார் சமூகங்களின் மாற்று வாழ்வாதார திட்டம் குறித்து.
இத்திட்டத்தை நிறைவேற்ற மொத்தத்தில் எட்டு லட்சம் கோடி தேவை எனவும், இத்திட்டம் நிறைவேற்றினால் 2020 க்குள் ரூ 110 பில்லியன் அளவுக்கு சரக்கு ஏற்றுமதியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் 400 மேற்பட்ட திட்டங்கள் உள்ளது, நாற்பது லட்சம் பேருக்கு நேரடியாகவும் அறுபது லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்குமென ஆசை வார்த்தை கூறபடுகிறது,
துறைமுக கட்டமைப்பை மேம்படுத்துவது
""""""""""""""""""""""""""""""""""""""""""
துறைமுகங்களை மேம்படுத்துவதே
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அறிக்கை கூறுகிறது ,
அதனடிப்படையில் ரூபாய் 91434 கோடி முதலீட்டில், 12 பெரிய துறைமுகங்களையும் , 142 சிறிய துறைமுகங்களையும் , நவீனபடுத்தி சர்வதேச தரத்திற்கு சரக்கு பெட்டகங்களை கையாள்வது, இதன் தொடர்ச்சியாக
மராட்டிய மாநிலத்தில் வதவன், கர்நாடக மாநிலத்தில் பெலிகிரி, தமிழகத்தில் இணையம் தற்போது குளச்சல் கோவலம், மற்றும் சீர்காழி, ஒரிசாவில் பாரதீப் வெளி துறைமுகம், மேற்கு வங்கத்தில் சாகர் தீவு, உள்ளிட்ட
ஆறு புதிய துறைமுகங்கள் அமைப்பது இதற்கான ஒப்புதலை 5-7-2016 ல் மத்திய அரசு வழங்கியது.
புதிய துறைமுகங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்பது உன்மையே, ஆனால் அவற்றை அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் செய்யும் போது தான் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுபாட்டில் துறைமுகங்கள் செல்லும் என்றால், நாட்டில் உள்ள சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் மண்டியிட்டு கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு வழிகோலாது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும், இந்திய துறைமுகங்களை நேரடியாக தனியாரிடம் தாரைவார்க்காமல், கொல்லைபுறம் வழியாக தனியார் வசம் கொடுப்பதே சாகர்மாலா திட்டம் என்கிற சாகசம், சாகர்மாலா கம்பெனிக்கு பின்னால் ஒழிந்திருக்கும் கார்ப்ரேட்டுகள் புதிய துறைமுகங்களை அமைக்கவும், பழைய துறைமுகங்களை நவீனமாக்கும் நடவடிக்கை என்கிற பெயரில் முதலீடு செய்து நாட்டில் உள்ள அனைத்து துறைமுக கட்டமைப்பை தங்கள் வசம் கொண்டு செல்ல எடுக்கப்படும் நவீன உத்தியே சாகர்மாலா திட்டம்.
துறைமுகங்கள் இணைப்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""
இருப்புபாதை , தரைவழி, வான்வழி, உள்நாட்டு நீர்வழி, குழாய்வழி, போன்றவற்றை
துறைமுகங்களுடன் இணைப்பது
இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய நோக்கம் என்கிறது திட்ட அறிக்கை, இதில் இந்திய ரயில்வே துறை நிர்வாகம் சாராமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில், இந்திய துறைமுக ரயில்வே கம்பெனி என்ற நிறுவனத்தை 10 -7-2016 அன்று துவங்கி,
அதை இந்திய கம்பெனி சட்டம் 2013 கீழ் பதிவு செய்து தற்போது 9 துறைமுகங்களை இணைக்கும் வகையில் 3300 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்புபாதை அமைக்க 25 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது,
இவற்றை நிறைவேற்ற தேவையான ரூ 28000 கோடி முதலீடை அன்னிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் திரட்ட போவதாக திட்ட அறிக்கை கூறுகின்றது .
சாலைகளை புதிதாக அமைத்தல், விரிவுபடுத்துதல் என்ற வகையில் 79 சாலைகள் சாகர்மாலா திட்டத்தின் கீழும், 45 திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலை துறை கொண்டு வந்துள்ள பாரத்மாலா திட்டத்தின் மூலமாக செய்யபடும் என அறிக்கை கூறுகின்றது.
இத்துடன் எரிவாயு மற்றும் எாிபொருள் போன்ற திரவ பொருட்களை நாடு முழுக்க கொண்டு செல்ல குழாய் அமைப்பது.
குறிப்பாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை துறைமுகங்களுடன் இணைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சரக்கு பெட்டகங்களை கையாள்வது, காரணம் தரைவழியை விட நீர்வழி போக்குவரத்து, பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால், மத்திய மோடி அரசு கடந்த 10-3-2016 அன்று உள்நாட்டு நீர்வழி மசோதா 1982 யை திருத்தம் செய்து, தேசிய நீர்வழி மசோதா 2016, என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது,
ஏற்கனவே இந்தியாவில் கங்கை, பாகிரதி, ஹீக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ண -கோதாவரி, நதிகள் கேரளத்தில் உள்ள சம்பகார மற்றும் உத்யோக் மண்டல கால்வாய் உள்ளிட்ட ஐந்து வழி தடங்களில் உள்நாட்டு போக்குவரத்து உள்ளது .
இந்த ஐந்து வழி தடங்களை மேம்படுத்துவது, அத்துடன் புதிதாக 106 நதிகளையும் உள்ளடக்கி, 111 நதிகளில்
உள்நாட்டு போக்குவரத்தை துவங்குவது என மசோதா கூறுகிறது, இதனடிப்படையில், தமிழகத்திலுள்ள கீழ்கண்ட ஏழு நதிகளில் உள்நாட்டு நீர்வழி தடம் அறிவிக்கப்பட்டுள்ளது,
1, காவிரி-கொல்லிட நதிகளில் , ஈரோடு மாவட்டம் உரச்சிகோட்டை துவங்கி, நாகை மாவட்டம் பழையாறு கடற்கரை வரையிலும்,
2, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை துவங்கி அம்பாசமுத்திரம் அலயூர் வரையும்,
3, பாலாற்றில் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ரயில்பாலம் துவங்கி , காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்க பட்டிணம் கடற்கரை வரை.
4,பழையாற்றில் குமரி மாவட்டம் வீரநாராயணமங்களம் துவங்கி மணக்குடி கடற்கரை வரை.
5, பொன்னி ஆற்றில் சாத்தனூர் அணை முதல் கடலூர் துறைமுகம் வரை,
6, தாமிரபரணி ஆற்றில் நெல்லை நகரில் துவங்கி , தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கடற்கரை வரை,
7, வைகை நதியில் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி முதல் மதுரை மாவட்டம் விரகனூர் வரை.
மேற்கண்ட நீர்வழி பாதைகள் சாதாரண மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டமில்லை, முழுக்க முழுக்க இந்திய மற்றும் பன்னாடு நிறுவனங்களின் சரக்குகளை மட்டும் ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது,
இதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யவில்லை, விவசாயிகள் பாசனங்களுக்கு நீரை பயன்படுத்துவதில், உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பு செய்வதிலும் ஏற்படும் சிரமங்களை பற்றி அறிக்கையில் எதுவும் கூறவில்லை,
இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் மாட்டார்கள்
மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்தார் , இதன் உள்ளடக்கமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை மற்றும் நதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியே ,
நாட்டில் உள்ள நதிகளின் மீதான மாநில அரசுகளுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமைகளையும், மோடி அரசு ஒரே ஒரு மசோதாவான உள் நாட்டு நீர்வழி மசோதா மூலம் பறித்துக் கொண்டது,
கடற்கரைசார் தொழில் மண்டலம்
"""""""""""""
தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்,
சாகர்மாலா திட்டத்தின்
தொடர்ச்சியாக மிக முக்கியமான ஒன்றாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கடற்கரையோர சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,
இந்தியாவில் 14 மண்டலங்கள் அமைக்கபடவுள்ளது , அதில் மூன்று மண்டலம் தமிழகத்தில் அமையவுள்ளது.
1,மன்னார் வளைகுடா மண்டலம், தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கியது.
2, பூம்புகார் மண்டலம், கடலூர் துறைமுகத்துடன் இணைக்கும் வகையில், கடலூர், பெரம்பலூர், அரியலூர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஐ உள்ளடக்கியது,
3, VCIC தென் மண்டலம், ( VENTURE CAPITAL INVESTMENT COMPETITION )
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர் , காஞ்சீபுரம் மாவட்டங்களைச் உள்ளடக்கியது,
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை தவிர தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.
புதுகோட்டை, இராமநாதபுரம், மாவட்டங்களை இதில் விடுவிக்க காரணம் இப்பகுதியில் ஆதம் பாலம் உள்ளது, மணல்மேடுகள் கடலில் அதிக அளவில் உள்ளது, சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாமல், இப்பகுதியில் கப்பல்கள் வரமுடியாது அதனால் விட்டுவிட்டனர். இந்தியாவில்
மொத்தம் உள்ள 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் கிட்டதட்ட இந்தியாவின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்கரை பகுதியை ஆக்கிரமிக்கிறது
கடற்கரை சமூகத்தினர் குறித்து
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இறுதி அத்தியாயத்தில் கடற்கரை சமூகத்தினர் குறித்து கூறப்பட்டுள்ளது? முதலாவதாக தேசிய அளவில் மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை புள்ளி விபரங்களுடன் கூறுகிறது.
நாட்டின் 72 கடற்கரை மாவட்டங்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரைகளில் வசிக்கின்றனர். 2010 கடற்கரை மீனவர்கள் கணக்கெடுப்பின் 61 விழுக்காடு கடற்கரை மீனவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் கடன்களை வாங்கி மீள முடியாத கடன் வலைகளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி இடை நிற்பவர்களாக உள்ளனர். 88 விழுக்காட்டினருக்குத்தான் மின்வசதி உள்ளது, 27 விழுக்காட்டினருக்குத்தான் சுகாதார வசதிகள் உள்ளன. 58 விழுக்காட்டினருக்கு பஸ் வசதிகள் உள்ளன.
மீனவர்களின் அவல வாழ்வு குறித்து இவ்வளவு துல்லியமான புள்ளிவிபரங்களைக் கூறும் சாகர்மாலா தேசிய கண்ணோட்டத் திட்டம் அவர்களை முழுமையாக அழிக்கப்படபோவது குறித்து மௌனம் சாதிக்கிறது. சாகர்மாலா திட்டத்திற்கு இடையூறாக, பெரும் தடைக்கற்களாக மீனவர்கள் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்கள் (critical stakeholders) என்ற நாகரீகமான வார்த்தையின் மூலம் ஆவணம் முன்வைக்கிறது. துறைமுகம் கட்டுவதினாலும் அதன் செயல்பாடுகளிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. துறைமுக வளர்ச்சித் திட்டங்களினால் மறைமுக பாதிப்புகள் என மக்கள் இடம் பெயருதல் , கடற்ரைகள் இழப்பு, கடலுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல முடியாத நிலை மற்றும் மோசமான மறுவாழ்வு திட்டங்கள் என ஒரு சிறிய பத்தியில் போகிறபோக்கில் இத்தகைய மிகக் கடுமையான பாதிப்புகள் கூறப்பட்டுள்ளன.
திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அழிப்பதற்கு நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப்போவதாக அறிவித்துள்ளதை தவிர ஆவணத்தில் வேறு ஒன்றும் சொல்லவில்லை,
கடலோர சமுக மக்களின் மாற்று வாழ்வாதார திட்டம் எதுவும் இல்லாத நிலையில்
சாகர்மாலா
திட்டத்தில்
கூறப்பட்டுள்ள 3 திட்டங்களின் ( துறைமுகம் நவீனப்படுத்துதல் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு) இதில்
ஏற்படவுள்ள வளர்ச்சியின் பயன்களை கடலோர சமுக மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பது மிகவும் ஏமாற்றமளிப்பாக உள்ளது.
பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?
சாகர்மாலா ,
இந்திய கார்பரேட்களின் நீண்ட கால கனவு திட்டம், மோடி தலைமையிலான பிஜேயை. ஆட்சியில் அமர வைத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு . மோடி அரசு. திரும்ப செய்யும் கைமாறு, கடல்சார் பழங்குடியின மக்களின் மீது தொடுக்கபட்ட மாபெரும் தாக்குதல்,
எனவே சாகர்மாலா போன்ற அழிவு திட்டங்களுக்கு எதிராக நெய்தல் நில மக்கள் நடத்தும் போராட்டங்களில் இதர பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவாக அணிதிரள வேண்டுகிறேன், இது கடலோர சமுக மக்களின் பிரச்சினை மட்டுமல்ல இது தேசத்தின் பிரச்சினை.
கட்டுரையாளர்:
சி.ஆர். செந்தில்வேல்
மாநில செயலாளர்
தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்
இராமேஸ்வரம்
தொலைபேசி 9940817745
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக